(Reading time: 22 - 43 minutes)
சிறுகதை - காலம் உனக்கொரு பாட்டெழுதும் - ரஞ்சகுமார்
சிறுகதை - காலம் உனக்கொரு பாட்டெழுதும் - ரஞ்சகுமார்

   

பெருமாள் இலகுவில் சளைத்து விடுபவனல்ல. கும்மிருட்டை ஊடுருவி பூனையைப் போல பார்க்க இவர்கள் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். கூர்ந்து பார்த்துக் கொண்டே போனான்.

   

என்ன மாதி¡¢ ஒரு மழை! இவன் தனது வாழ்நாளில் காணாத மழை. புழுதி அடங்கிப் போகிற வாசனை மிகுந்தது. இவன் நாசி நிறைய வாசனையை வாங்கி அனுபவித்தான். காலைத்தூக்கி முன்சீட்டில் இலகுவாக வைத்துக்கொண்டான்.

   

சட்டென்று ரோட்டு வெறிச்சோடிப் போகிறது. ஏனோ? சனங்கள் எவரும் இல்லை. மழைதான் காரணமோ என்னவோ? எதிரே ஒரு வாகனம் கூட வரவில்லை. கொட்டும் மழையில் சளைக்காமல் நனைந்தபடி ஆடி ஆடிப்போன ஒரு கிழட்டு எருதைத்தவிர, வெறிச்சோடும் ரோட்டு.

   

மூர்க்கத்தனமாக பூமியை மூழ்கடிக்கும் ஆவேசத்துடன் அம்புகளாக மழை வீழ்ந்துகொண்டிருந்தது. வானம் எச்சா¢க்கிறமாதி¡¢ அடிக்கடி பெருமிடிகளைக் கொடுத்தது. கூடவே உச்சியிலிருந்து கீழ்வான நோக்கி வானத்தை கூறுகளாகப் பி¡¢க்கும் கூர்வாளென பாயும் மின்னல்.

   

இவர்கள் எல்லோருக்கும் ஏனோ மயிர்க்கால்கள் குத்திட ஆரம்பித்தன. இதைவிட குருதியை உறையவைக்கும் குளிரை தாங்க இவர்கள் பழகிக்கொண்டவர்கள். ஆனால் இன்று என்னவாயிற்று? எலும்புக் குருத்துக்குள் ஊடுருவிப் புகுந்து கொள்கிற குளிர்.

   

அருள் கைகளைத் தேய்த்து சூடாக்கினான். நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டான். இவனைப் பார்த்து இயல்பான தோழமையுடன் சி¡¢த்தான். அருள் இன்று ஏனோ வழமையை விட அதிகமாக இளிக்கிறான். முகத்தில் ஒரு விசித்திரமான ஒளி பிறந்தது அருளுக்கு.

   

இவனுக்கு ஏனோ திடீரென அம்மா, சுலோ அக்கா, சுந்தா¢ அக்கா, எல்லோரும் உதித்தார்கள்.

   

மழையுடன்சேர்ந்து அம்மா மேனியில் மணக்கிற கற்பூரவாசனை வீசிற்று. மழையில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.