(Reading time: 22 - 43 minutes)
சிறுகதை - காலம் உனக்கொரு பாட்டெழுதும் - ரஞ்சகுமார்
சிறுகதை - காலம் உனக்கொரு பாட்டெழுதும் - ரஞ்சகுமார்

கற்பூரத்தை கரைத்தவன் எவன்?

   

சுந்தா¢யக்காவின் பொ¢யகண்கள் முன்னே தோன்றின. இரு கனத்த வைரத்துளிகளைச் சிந்தின. சுந்தா¢யக்கா இதமாக இவன் கைகளைத் தொடுவது போலிருந்தது. சுந்தா¢யக்கா இந்த மழையிலும் வேலைக்குப் போயிருப்பாள்!

   

சுலோ அக்காவின் கீச்சுக்குரல் பேய்க் காற்றில் கலந்து வந்தது. இவனை, ஆதங்கமும் பொறுக்க முடியாமல் பீறிடுகிற அன்புமாக சுலோ அக்கா அழைத்துக்கொண்டு தொண்டைக்குழியைப் பிளந்துகொண்டு ஒரு நாகமென வெளிவந்தது.

   

இவன் கண்களைத் திறந்தான். பெருமாள் ஒரு வளைவில் வேகத்தை மாற்றாமலே லாவகமாகத் திரும்பிக் கொண்டிருந்தான். சூரன்தான்! ஒரு நூறுயார் தூரத்துக்கப்பால் பார்வை புலப்படாதபடிக்கு கனத்த திரைகளாக மழை விழுந்துகொண்டிருக்க, வைப்பர் வேலைசெய்யாமலே படுவேகமாக வானைச் செலுத்திப் போகிறான்! வேறு எவனால் இப்படி முடியும்? அசகாயசூரன்தான்!

   

ரோட்டு நேரே கோடுபோட்டதெனச் செல்கின்றது. பெருமாள் கிழித்துக்கொண்டு போனான்.

   

ஏன்?...ஏன்...? என்ன...?

   

பெருமாள் சடக்கென்று பிறேக் போட்டான். எதிரே ஏதோ பிசாசுத்தனமாக நெருங்கிக் கொண்டிருந்ததாக எல்லோரும் உணர வாரம்பித்தார்கள்.

   

பெருமாள் கோணாமலையைத் திரும்பிப் பார்த்தான். கோணாமலை இறுகிய முகத்தவனாய் "முன்னேபோ" என தலையைக் குலுக்கினான். எல்லோருக்கும் வேகமாக மூச்சு வாங்கவேண்டும் போலிருந்தது. உள்ளங்கையை இறுகப் பொத்திக் கொண்டார்கள்.

   

பெருமாள் நிதானமாக முன்னே போனான். தலையை வெளியே நீட்டி நீட்டிப் பார்த்துக்கொண்டே போனான். எல்லா வீடுகளும் தெருவாசலைப் பூட்டியபடி மெளனமாய் மழையில் கொட்டக் கொட்ட நனைந்து கொண்டிருந்தன.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.