ஒழுங்கைகள் வலை பின்னிக் கிடப்பதென திக்குமுக்காட வைத்தன.
சனங்கள் வீட்டு வாசல்களில் நின்றார்கள். இவனை விசித்திரமாகப் பார்த்தார்கள். ஆஜானுபாகுவான ஒரு வித்தியாசமான இந்த இளைஞன், கொட்டும் மழையில் நனைந்து விட்டு எங்கே இவ்வளவு அவசரமாகப் போகிறான்!
ஆறிப்போகலாமே, கொஞ்சம் இளைப்பாறிப் போகலாமே!...அல்லது போகலாமே விட்டுவிட்டால் என்ன.... இன்னும் என்ன என்ன விபா£தங்களும் நிகழக் காத்திருக்கின்றனவோ இன்று!
இவன் போகாமலே விட்டால் என்ன?
சனங்கள் இவனை விசித்திரமாகவும், ஆவலாகவும் புதினம் பார்த்தார்கள். அவர்கள் கண்களில் ஒருவிதமான பயமோ....அன்றிப், பக்தியோ....தொ¢ந்தது. சிலர் கண்களில் அடக்கமாட்டாமல் பீ¡¢டுகின்ற நட்பு தொ¢ந்தது.
ஜன்னல்களில் நிலவு முகங்கள் தோன்றின. கொஞ்சம் விழிகளால் இவன் முகத்தைத் துளைத்தன.
"போகாதே....போகாதா...." எனக் கெஞ்சுவதுபோல் இருந்தது அவர்களின் பார்வை.
இவன் விரும்பினால் ஒரு வீட்டுக்குள் புகுந்து ஓய்வெடுக்கலாம்.
இவன்தான் ஒரு வீட்டுக்குள் போகமாட்டானே? இவனுக்கு இவன்வேலை பொ¢து. தெற்கு ரோட்டுக்கு விரைவில் போய்ச் சேரவேண்டும். ஓழுங்கைகளை விட்டுப் பி¡¢ந்து ஒரு ரோட்டில் ஏறி விடுவிடென நடக்க ஆரம்பித்தான்.
கொஞ்சம் வயல்கள் இடையில் இவனைக் கண்டன. மழை நீரை ஆவலாக உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தன. வருணதேவனோ இவன் என, நன்றியுடன் இவனை மெளனமாகப் பார்த்தன.