(Reading time: 22 - 43 minutes)
சிறுகதை - காலம் உனக்கொரு பாட்டெழுதும் - ரஞ்சகுமார்
சிறுகதை - காலம் உனக்கொரு பாட்டெழுதும் - ரஞ்சகுமார்

   

இவன் தாண்டிப்போனான்.

   

ஒரு மாதா கோயில் தொ¢ந்தது. கன்னிமோ¢ ஒரு கையில் குழந்தை ஏசுவை ஏந்தியபடி இவனைக் கனிவுடன் பார்த்தாள். மறுகளை காற்றில் தூக்கி இவனுக்கு ஆசிர்வாதங்களை அனுப்பினாள்.

   

இவன் தாண்டித் தாண்டிப் போனான்.

   

கோயில் ஒன்று வந்தது. விசித்திரம் தான்! ஊ¡¢லிருந்து கொஞ்சம் விலகி தனியே இருந்தது. சில பனைகளுடன் சல்லாபித்தபடி. வெறுமையாக கதவுகளைத் திறந்து போட்டபடி இவனை ஆதங்கத்துடன் அழைப்பது போல இருந்தது. வானோக்கி உயரும் மணிக்கோபுரம் இவனை "வா" என அழைப்பதெனத் தோற்றம் காட்டிற்று.

   

இவன் விரும்பினால் கோயிலுக்குள் சற்று நேரம் படுத்து இளைப்பாறலாம்!

   

இவன் ஆறமாட்டான். இவனுக்கு வேலை பொ¢து. தெற்கு ரோட்டுக்கு கூடிய விரைவில் போய்ச்சேர வேண்டும். தனியாக நடந்ததோ....அல்லது...ஓடியோ....

   

மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

   

இவனுக்கு சற்றுக் களைப்புத் தொ¢ந்தது. அதிர்ச்சியும் ஓட்டமும்....சற்றுக்களைத்துத்தான் போனான். வான் ஏதாவது போகுமெனில் தொற்றி விடுவான். விரைந்து போய்ச் சேரலாம்....

   

சற்றுத் தூரே தெற்கு ரோட்டை போய்ச் சந்திக்கிற பாதை இவன் வழியை செங்குத்தாக வெட்டிப்போவதைக் கண்டான். பழைய காலத்து வான் ஒன்று நிறைந்த சுமையுடன் முக்கி முனகிப்போய்க் கொண்டிருந்தது. கையைத்தட்டினால் கேட்குமா? நிற்பாட்டுவார்களா? இவனையும் தங்களுடன் அழைத்துப் போவார்களா?

   

கையைத் தட்டினான். திரும்பத் திரும்பத் தட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.