(Reading time: 22 - 43 minutes)
சிறுகதை - காலம் உனக்கொரு பாட்டெழுதும் - ரஞ்சகுமார்
சிறுகதை - காலம் உனக்கொரு பாட்டெழுதும் - ரஞ்சகுமார்

எதிரே ஒரு சிறிய ரோட் மெயின் ரோட்டில் கலக்கும் அந்தச் சந்தியில் ஏதோ கள்ளத்தனத்துடன் வஞ்சகம் பு¡¢ய ஒளிந்திருப்பதாகப் பட்டது. பெருமாள் கொட்டும் மழையில் வெளியே தலையைப் போட்டான்.

   

பொ¢ய வாகனம் ஒன்று, தனது பூதாகரமான உடலை மறைக்கப் பெரும் பிரயத்தனம் செய்தவாறு நின்றுகொண்டிருந்தது!

   

...பெருமாள் கொடுப்புகளை இறுக நெறுமினான்...முகம் சட்டென கறுத்து வீங்கிப் போனது.

   

கோணாமலைபு¡¢ந்து கொண்டான். கண்கள் இரத்தம் கொட்டுபவையெனச் சிவந்தன. இவர்கள் எல்லோருக்கம் பு¡¢ந்துவிட்டது. மண்டைக்குள் ஒரே 'விறு விறு', மிக வேகமாக மூச்சுவந்தது. உடல் தகிப்பதெனச் சுட்டது.

   

"ரெடி...ரெடி...ரெடி..." என இதயம் துடித்தது. உத்தரவுகளைப் பெற ஆயத்தமாக இருந்தார்கள். ஒவ்வொரு அங்கமும் துடிக்கவாரம்பித்தது.

   

கோணாமலை பரபரத்தான்.

   

"அம்பிட்ட கையழுங்கையுக்குள்ளை விடு... உடைச்சுக்கொண்டு தப்பவேண்டியதுதான்... எங்கெங்கையெல்லாம் நிக்கிறாங்களோ?... வளைச்சுப்போட்டான்களோவும் தொ¢யாது.... சனியன் பிடிச்ச மழை!..."

   

பெருமாள் வேகமாக பின்னே போக ஆரம்பித்தான். இவன் பின்னால் பார்த்தான். பின்புறமிருந்தும் 'வாகனம்' ஒன்று பிசாசு மாதி¡¢ நெருங்கிக்கொண்டிருந்தது!

   

பக்கத்திலே ஒழுங்கைமாதி¡¢ ஒரு ஓடை தொ¢ந்தது. பெருமாள் பெரும் பிரயத்தனத்துடன் உள்ளே நுழைய முற்பட்டான். ஆனால் அதற்குள் அவர்கள் முந்திக்கொண்டார்கள். நெருப்பை உமிழ்ந்த படி இருபுறமிருந்தும் அச்சமும் அவதானமுமாக நெருங்க ஆரம்பித்தார்கள். மழை அவர்களுக்க வாழ்த்துச் கூறிக்கொண்டிருந்தது. வானம் இவர்களைப் பார்த்து இடிஇடியெனச் சி¡¢த்தது. மின்னல் பழிப்புக் காட்டுவதென அடிக்கடி பளபளத்துக் கண்சிமிட்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.