" ச்ச்சி .... இப்படி கூட பணப்பேய் இருப்பாங்களா ?? பிறக்க போகிற குழந்தையை வெச்சு சம்பாதிக்கணும்னு நினைக்கிற இவ எல்லாம் ஒரு பொண்ணா ? ச்ச .. வர கோவத்துக்கு அம்மா பொண்ணு ரெண்டு பேரையும் இப்போவே வீட்டை விட்டு தொரத்துனும் போல இருக்கு .. ஆனா ஆனா .. என் குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு ?? மாட்டேன் விட மாட்டேன் .. என் வாரிசு இவ நிழலில் வளரவே கூடாது .." மானசீகமாக அவன் குழந்தையிடம் சொன்னான் " பாப்பா சீக்கிரம் அப்பாகிட்ட வந்திடுங்க ... நீங்க இப்போ இருக்குற இடம் ரொம்ப கொடூரமானது ...தாய்மையின் அருமை தெரியாத ராட்சசி அவ " என்றான் .. குழந்தை பிறக்கும்வரை தனக்கு உண்மை தெரிந்தது போல காட்டிக்கொள்ள கூடாது என்று முடிவெடுத்தான் அஜய் .. ஆனால் விதி வேறொரு முடிவெடுத்தது ..
" அக்கா " என்று சிரித்து கொண்டே ஓடி வந்து சாதனாவை அணைத்துக் கொண்டாள் அஞ்சனா...
" அஞ்சு .. என்னடா இப்படி இளைச்சு போயிட்ட ? "
" அடடே நீ மட்டும் என்னவாம் ? ஜோதிகா மாதிரி இருந்த இப்போ ஹன்சிகா மாதிரி இருக்க "
" வாயாடி .. ஹன்சிகா மட்டும் ஒல்லியாக்கும் ? "
" பின்ன இல்லையா ? டயட், எக்சர்சைஸ் அது இதுன்னு என் டார்லிங் டம்பக்கு ஸ்லிம் ஆகிட்டா தெரியும் "
" போதும் போதும் உன் ஹன்சிகா புராணம் .. வா போகலாம் "
அக்கா தங்கை இருவரும் இந்த இரண்டு வருடத்தில் நடந்த மாற்றங்கள் பத்தி சுவைப்பட பேசிக்கொண்டே வீடு சேர்ந்தனர் ..
" அக்கா உன் கிட்ட ஒன்னு சொல்லணும் .. "
" சொல்லு அஞ்சு "
" இதுக்கு மேல என்னால அமைதியா இருக்க முடியல அக்கா .. இ ஸ்டில் லவ் அஜய் .. எனக்கு உன் சம்மதம் முக்கியம் அக்கா .. நீ சரின்னு சொன்னா நான் அடுத்த ட்ரைன் ல எ அவனை பார்த்து ப்ரபோஸ் பண்ணலாம்னு இருக்கேன் "
" அஞ்சனா !!!"
" என்ன அக்கா ???? உனக்கு அஜயை புடிக்கலையா ? "
" அஞ்சு .. இத்தனை நாளாக நீ அஜயை பத்தி பேசவே இல்லையே .. ! ஏன் என்கிட்ட நீ சொல்லல ? நான் கூட நீ அவனை மறந்துட்டன்னு நெனச்சேன் . .." என்றவளின் குரலில் இருந்த தடுமாற்றத்தை அஞ்சனா கவனிக்கவில்லை...
" நீதானே அக்க பொறுமையா இருக்க சொன்ன ? அதுனாலத்தான் நானும் என்னை நானே டெஸ்ட் பண்ணிகிட்டேன் "
அஜய்கு திருமணமான விஷயம் சாதனாவிற்கு அண்மையில் தான் தெரியும் .. எனினும் தன் தங்கை இப்போதெல்லாம் அவன் பேச்சை எடுப்பதில்லை என்பதினால் அவளும் இதை பற்றி பேச வில்லை .. ஒரு புறம் இனி பேசி ஒன்னும் ஆகபோவதில்லை என்ற எண்ணம் , இன்னொரு புறம் அவளுக்கும் இது தெஇர்ந்துதான் அஜயை பற்றி பேசவில்லையோ என்ற கணிப்பு .. ஆனால் இரண்டுமே பொய்யாய் போனது ..
" கடவுளே.. பொறுமையாய் இருன்னு சொல்லி நானே என் தங்கச்சி வாழ்க்கையை வீணாக்கிட்டேனா ? இப்போ நான் என்ன செய்வேன் ???"
" அக்கா ..........................!!! "
" ஆங் ????"
" என்ன நான் கூப்பிடுட்டே இருக்கேன் .. நீ பேசாமலே இருக்க ??? "
" நீ .. நீ முதலில் சாப்பிடு .. உன்கிட்ட நான் பேசனும் "
" அப்போ நீ முதலில் சொல்லு பிறகு சாப்பிடலாம் .. " என்றாள் இளையவள் ..
" இப்போ சாப்பிட முடியுமா ? முடியாதா ? " என்று கேட்டவளின் குரல் உயர்ந்திருந்தது .. மெல்ல அதிர்ந்துவிட்டாள் இளையவள் .. எதுவும் பேசாமல் உணவு உண்டாள் .. தங்கையை அப்படி பார்க்க, சாதனாவிற்குமே உயிர்வலியாய் இருந்தது ..
" சின்ன பொண்ணு வாழ்கையை நாமலே இப்படி ஆக்கிட்டோமே ? அஜய் கு கல்யாணம் ஆச்சுன்னு சொன்னா இவ எப்படி தாங்குவா ? " என்று மருகினாள்...
" அக்கா நீ சாப்பிடலையா ? "
" அப்பறமா சாப்டுறேன் அஞ்சு ... உன்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும் "
" அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் தெளிவு பண்ண விரும்புறேன் அக்கா "
" அதுக்கு அவசியம் இருக்காது அஞ்சனா .. என்னை முதலில் பேச விடு .. "
" என்னாச்சு அக்கா ?? " தங்கையின் முகம் பார்க்க முடியாமல் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அழுதாள் சாதனா
" அக்கா .. என்னாச்சுனு சொல்லு அக்கா "
" அஜய் .. அஜய்... அஜய்கு "
" அஜய்கு என்ன ???"
" கல்யாணம் ஆகிடுச்சு ! "
அந்த ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தாள் அஞ்சனா .. அவள் அக்கா எவ்வளவோ கூறியும் தனியாகவே அஜயை பார்க்க செல்கிறேன் என்றுவிட்டாள் பிடிவாதமாய் ..
" கவலைபடாதே அக்கா .. போன வேகத்தில் சீக்கிரம் உன்கிட்ட திரும்பி வந்திடுவேன் .. நீ பத்திரமா இரு .. நடந்த எதுக்கும் நீ பொறுப்பு இல்ல .. சோ மனசை போட்டு குழப்பிக்க கூடாது ... என் அக்கா எப்பவும் தைரியமாய் இருக்கணும் " என்று செயற்கையாய் புன்னகைத்தாள் ..
" ம்ம்ம்ம் " என்று தலை அசைத்தாள் சாதனா .. ரயில் முன்னோக்கி செல்ல, அஞ்சனாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றன ..
" என்னக்கா சொல்லுற ? "
" ஆமா டா.. எனக்கே ரெண்டு மாசம் முன்னாடித்தான் தெரியும் "
" ஏன் என்கிட்ட நீ சொல்லல ? "
" நீ இப்போ எல்லாம் அஜய் பத்தி பேசல .. அதான் "
" அதான் நான் மறந்துட்டேன்னு நெனைச்சியா ?? "
" ....."
" சரி விடு அக்கா .. இப்போ அஜய் அவன் ஊரில் தானே இருக்கான் "
" ஆமா ஏன் ?? "
" எனக்கு அவனை பார்க்கணும் "
" என்ன சொல்லுற அஞ்சு "
"..."
" அஞ்சு .. ???"
வெடித்து அழுதாள் அஞ்சனா ..