(Reading time: 26 - 52 minutes)

 

" போடீ " என்றான் அஜய் .. அவனின் உரிமையான அழைப்பில் சொக்கித்தான் போனாள்  அஞ்சனா .. அன்று மட்டும் இல்லை .. இந்த ஒரு வருடமாகவே அவன் காட்டும் அன்பும் உரிமையும் அவளை மயக்கி கொண்டுதான் இருந்தது .. என்றாலும் .. ???அதை அப்பறமா சொல்றேன் ..

இறைவன் சன்னதியில் தங்கள் மகளின் நலனுக்காக வேண்டினர் இருவரும் .. அவர்களை பார்த்த அர்ச்சகர்

" என்னம்மா கோவிலுக்கு வந்திருக்க , நெற்றியில் குங்குமம் இல்லையே ...தம்பி குங்குமம் வெச்சு விடுப்பா உன் மனைவிக்கு " என்று குங்குமத்தை நீட்டினார் .. கொஞ்சமும் யோசிக்காமல் அவளுக்கு திலகமிட்டான் அஜய் .. விழிகலங்க அவனையே பார்த்திருந்தாள்  அஞ்சனா ...

" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் கண்ணம்மா .. என்னடா இது நல்ல நாள் அதுவுமா அழுதுகிட்டு .. பாரு கிருஷ்ணா உன்னையே பார்குறா "

" அஜய் .. அஜய் ..நீங்க .. "

அவளை ஒரு இடத்தில் அமர வைத்தவன், கோவிலில் கொடுத்த பிரசாதத்தை அவளுக்கும்  கிருஷ்ணாவிற்கும் ஊட்டிவிட்டு கொண்டே பேச தொடங்கினான் ..

" அஞ்சனா, நான் உன் வீட்டுக்கு வந்த முதல் நாளே உன்  காதலை பத்தி சாதனா சொல்லிட்டாங்க .. என்னை மன்னிச்சிருடா .. நானே இதை தெரிஞ்சிருக்கணும் .. ரொம்ப லேட்டாதான் எனக்கே தெரிஞ்சது "

" ஐயோ .. என்ன அஜய் ? நான் தானே சொல்லாமல் இருந்தேன் .. "

" இருந்தாலும் ??? என்னால எவ்வளவு வேதனை உனக்கு ?? "

" அதுக்காகத்தான் இப்போ ஏற்றுக்க  போறிங்களா ? "

" மக்கு மக்கு .. உன் மேல பரிதாபமோ அல்லது கிருஷ்ணாவுக்காகவோ உன்னை நான் விரும்பல .. சொல்லபோனால் சாதனா சொன்னப்போ நான் இங்கிருந்து போறேன்னுதான் சொன்னேன் .... ஆனா உன்முகம் என்னை போக விடல .. நான் வாசலில் இருந்தப்போ நீ நின்ன தோற்றம் அதை சாகுற வரை என்னால மறக்க முடியாது டா .. ஆனா கிருஷ்ணா உன் கைக்கு வந்ததும் நீ எப்படி மாறிட்ட .. தாய்மையை உன் முகத்தில் பார்த்தேன் .. முதலில் உனக்காகவும் பாப்பாவுக்காகவும்தான் நான் இங்க இருக்க சம்மதிச்சேன் .. ஆனா போக போக என் மனசு உன் பக்கம் சாய்ஞ்சிடுச்சு .. உன்மேல எப்போ காதல் வந்திச்சுன்னு தெரில .. ஆனா நீ கிருஷ்ணாவை கொஞ்சும்போது கூட எனக்கு பொறாமை வரும்.. அப்போதான் என் காதலை உணர்ந்தேன் .. "

அவன் சொன்ன விதத்தில் அழகாய் முகம் சிவந்தாள் அஞ்சனா ..

" ஆனா .. ஆனா நீதான் அதுக்கு பிறகு உன் காதலை என்னிடம் சொல்லுவும் இல்ல செயல்லயும் காட்டல .. அதான் ஒருவேளை எனக்கு இரண்டாம் தாரம் ஆக" என்று முடிக்கும்முன்னே அவனை  தடுத்தாள்  அஞ்சனா .. காதலும் கண்ணீரும் போங்க அவன் தோளில்  சாய்ந்து கொண்டாள் ....

" உங்க மேல நான் வெச்சிருக்குற காதல் எப்பவுமே மாறாது அஜய் .. நீங்க தாலி கட்டலனாலும், என் அருகில் இல்லனாலும் நான் உங்க மனைவியாதான் வாழ்ந்து இருப்பேன் .. அதுவும் கிருஷ்ணா .. இவ என் உயிர் "

" தெரியும்டா .. நீ கிருஷ்ணாவுக்கு தாய்ப்பால் கொடுத்தது கூட சாதனா மூலமா தெரிஞ்சுகிட்டேன். . ..தாய்மையும் தான் எவ்வளவு அழகான உணர்வு .... எனக்கு அப்போவே என் மனசை உன்கிட்ட சொல்லணும் நெனச்சேன் .. ஆனா உன் ஒதுக்கம் எனக்கு புரியல டா "

" அதுக்கு காரணம் இருக்கு அஜய் .. நீங்க எனக்கு எவ்வளவு முக்கியமோ அப்படித்தான் கிருஷ்ணாவும் .. நான் காதலை சொல்லி .. நீங்க அதை பிடிக்காமல் என்னை விலகுறேன்னு சொல்லி பாப்பாவையும் கூடிட்டு போயிட்டா , நான் உண்மையிலேயே பைத்தியம் ஆகிடுவேன் "

" ஹே .. என்னடா இது ... முதலில் அழறதை நிறுத்து .. " அவள் அப்போதும் அழுகையை நிறுத்தாமல் போக

" நீ பைத்தியம் ஆகா சான்ஸ் ஏ  இல்லை " என்றான்

" ஏன் ??"

" பின்ன பைத்தியத்துக்கு எப்படி பைத்தியம் பிடிக்கும் " என்று சொல்லி சீண்டினான் ..

அவளோ காதலுடன் "ஆமா பைத்தியம்தான் உங்க மேல " என்றாள் .. இருவரும் காதல் பார்வையை பரிமாற்ற நம்ம கிருஷ்ணா தான்

" ஜய் .....ம ....ம்மா " என்று அஜயையும்  அஞ்சனாவையும் மழைலை மொழியில் அழைத்தாள் .. அவளின் பேச்சின் அழகை ரசித்து இருவரும் ஒரே நேரத்தில் அவளது  இரு கன்னங்களிலும்  முத்தத்தை பதித்தனர் ...

 ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ,

" அம்மா ..... வேகமா ஊஞ்சல்  ஆட்டுங்க " என்றாள்  கிருஷ்ணா ..

" போதும்டா கண்ணா .. தலை சுத்தும் "

" அதெல்லாம் சுத்தாது மம்மி " என்றபடி அங்கு வந்தான் அஜய் .. கிருஷ்ணாவை தூக்கி மூன்று முறைசுத்தி ஊஞ்சலில் அமரவைத்தான் ..."  அப்பா .. அம்மாவும் சுத்துங்க " என்று அவள் எடுத்து கொடுக்க, அஞ்சனாவையும் தூக்கி சுற்றி ஊஞ்சலில் அமரவைத்தான் அஜய் .. அவனின் நெருக்கத்தில் திக்குமுக்காடி போனாள்  அஞ்சனா .. அந்த மரஊஞ்சலில்  இருவருக்கும் நடுவில் அமர்ந்து வேகமாய் ஊஞ்சலாடினான் அவன்  , ஒரு இனிய பாடலை பாடிக் கொண்டே .. அவனுக்காக பிறந்த அந்த இரண்டு அழகிகளுக்காகவும்  பாடினான் அஜய்… பாடலுடன் நாமும் விடைபெருவோமே...!

எனக்காக பொறந்தாயே எனதழகி

இருப்பேனே மனசெல்லாம் உனை  எழுதி

உனக்கு மாலை  இட்டு வருஷங்கள்  போனா என்ன?

போகாது உன்னோட  பாசம்

எனக்கு எம்மேல தான் ஆச இல்ல

உம்மேலதான்  தான் வச்சேன்

என்னை  ஊசி இன்றி  நூலும் இன்றி

உன்னோடதான்  தான் தைச்சேன்

_/\_

This is entry #06 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.