(Reading time: 33 - 65 minutes)

ன் பேரண்ட்ஸையோ...உன் பேரண்ட்ஸையோ மனச கஷ்டபடவிடுட்டு நம்ம லைஃப தொடங்கிறதுல எனக்கு சம்மதம் இல்லமா....கூடுமானவரை எல்லாரோடும் சமாதானமா இருக்கனும்....நம்மளால கூடாமா போனாதான்...உறவுகளை விட்டுகொடுக்கலாம்..... “

அவன் சொல்ல சொல்ல அத்தனை சூழலிலும் இவள் சாப்பிடவில்லை என்பதால் அவனும் சாப்பிடாதது, இவள் கதவை உள்ளே பூட்டிக்கொள்ள கூடாது என்று சொன்னது....இவள் தனியாக இருக்கும்போதும் அனித்ராவை அனுப்பி வைத்தது என ஒவ்வொன்றாக மனதில் வர...அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

வன் மொபைல் சிணுங்க, இவள்தான் இணைப்பை ஏற்றாள்.

“ஹலோ....”

“போங்கண்ணி நீங்க சுத்த வேஸ்ட்...அத்தனை திட்டுறேன்....ஒரு வார்த்தை பதிலுக்கு பதில் பேசாம இடிச்சபுளி மாதிரி...ப்ச்....ரொம்ப போரிங்.... இந்த நிவந்தும் அப்பாவும் எதுக்கெடுத்தாலும் எனக்கு சிங்க் சா போடுற பார்ட்டி...ஆகா ஒரு அண்ணி வர்றாங்களே... அப்பப்ப காரசாரம ஒரு சண்டைய போட்டோம்...நல்லதா நாலு விஷயம் ஆர்க்யூ பண்ணுனோம்னு லைஃபை ஃபுல்ஃப்ளெட்ஜா என்ஜாய் பண்ணுவோம்னு பார்த்தா...லட்டு மாதிரி ஆப்பர்சுனிட்டில நீங்க டக்கு வாங்கிட்டீங்க...”

“ஹலோ...அப்ப உங்க அண்ணன் சொன்னாங்கன்னு நாய், நாட்டுகோழின்னு எதோ சொன்னீங்க ஓகே...இப்ப என்ன இடிச்சபுளி...இடியாப்பம்னு சொல்லிகிட்டு....வாய் ரொம்ப நீளுதோ...வட்டியும் முதலுமா திருப்பி தருவேன்...ஆமா..”

“ஐயோ அண்ணி நீங்க இன்னும் என் மேல கோபத்துலதான் இருக்கீங்களா...? சாரி....இந்த நிவந்துக்கு ஹெல்ப் பண்றதா நினச்சுகிட்டு....வெரி சாரி அண்ணி...”

“அது....பயந்துட்டீங்கல்ல...பதிலுக்கு பதில் சண்ட போடனும்னு கேட்டீங்களே அதான் ஒரு சாம்பிள் காமிச்சேன்...”

“வரே வா...எனக்கு பிடிச்சமாதிரி அண்ணி செலக்ட் செய்துருக்கான் நிவா..ஐ லவ் யூடா அண்ணா” அலறினாள் அனித்ரா...

“மேடம்ஜி...இந்த டையலாக்க நாங்களே இன்னும் எங்க ஆத்துகாரர்ட சொல்லலை...நீங்க கொஞ்சம் இடத்தை காலி செய்றீங்களா..?”

“ம்...இத சொல்ல எனக்கும் ஒரு ஆள சீக்கிரமா செட் செய்யுங்க...அப்புறம் உங்க பேச்சுக்கு நான் ஏன் வாரேன்...”

“அது தான் தாயே எனக்கு முத வேலை...”

“ஆங்...செலக்ட் செய்றப்ப மாமியார், நாத்தனார்,   ஓரகத்தி எல்லோரும் இருக்கிற மாதிரி குடும்பமா பாருங்க...சண்டபோட்டு ஜாலியா இருக்க வசதியா இருக்கும்...”

“புல்லரிச்சுட்டுமா நாத்தனாரே!...நீங்க போறவீடு எவ்ளவு புண்ணியம் பண்ணியிருக்குதோ...”

“ஹி...ஹி...அது அவங்களுக்கான தேவ உதவி... சண்ட பிடிக்கிற நாத்தனாரும் மாமியாரும்.... நம்மள இன்னுமா கடவுள்ட்ட கிட்டி சேர ஹெல்ப் பண்ணுவாங்களாம்... கேள்விபட்டிருக்கேன்.... எப்பூடி?”

“கலக்கிட்டீங்க போங்க...”

“நன்றி நல்லவங்களே நன்றி... அதோட அப்டியே நிவந்த் அண்ணா  ஃப்ரெண்ட் அவிர் வீட்ல வரப்போற மருமகளுக்கு மாமியார், நாத்தனார், ஓரகத்தி எல்லாம் அல்ரெடி அவைலபிளா இருக்காங்கன்றதையும் சேர்த்து ஞாபகம் வச்சுகோங்க...கரெக்டான நேரத்துல இதை அண்ணா அப்பா காதுல போட்டு நம்மள கரையேத்தி விட பாருங்க...”

“ஹேய்...”

“அண்ணி உங்களத்தான் நம்பி இருக்கேன்...”

மனம் நிறைந்து போனது அஞ்சனிக்கு.

ப்பொழுதும் அதே வீடுதான். வீட்டு வாசலிலிருந்து பூக்கோலம், அவர்களது படுக்கை அறை வரையும்.

“அனியோட வேலை...சரியான வாலு...” சொல்லிக்கொண்டே இவள் கைபிடித்து அழைத்துக் சென்றான் நிவந்த்.

ஏனோ மொத்த உலகமும் அவளுடையதாய் தோன்றியது அஞ்சனிக்கு.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.