(Reading time: 18 - 36 minutes)

வளின் வெட்கத்தை ரசித்தவனின் கண்களில் சற்று கர்வமும் இருந்தது..மலையின் உச்சியில் பிடிக்கும் இடத்தை விட ஒரு பெண்ணின் மனதில் பிடிக்கும் இடம் சற்றே  உயர்ந்ததுததான்..அந்த கர்வம் தான் அவனிடத்திலும்..

“மீனு”

“ம்ம்ம்ம்ம்”

“இங்க பாரேன்”

தலை திருப்பி தன்னவனை பார்த்தாள்..

நா சொன்னா எந்த எதிர்பேச்சும் இல்லாமல் அத ஏத்துக்கிற பாரு அங்கயே நா காலி என்றான் அவள் கையை தனக்குள் அடக்கியவாறே.,

பெண்மைக்கே உரிய சிலிர்ப்புடன் அழகாக சிரித்தாள்…

தன்னவளை தோளில் சாய்த்தவாறு காரின் எஃப்ம் ஐ உயிர்பித்தான்..

யாரோ ஒரு நேயரின் கவிதையை அந்த அறிவிப்பாளர் உணர்ச்சியோடு மக்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்..

“காதல்

கடவுளை உணராதவரும்

 உணரும் அதிசயம்

வயது  வரம்பின்றி அனைவரையும்

உரசி செல்லும் ரகசியம்

தன்னை தேடுபவர்களை

அலட்சியப்படுத்துவது இதன் வாடிக்கை

தன் னை நாடாதவர்களை

உலுக்கி விடுவது இதன் வேடிக்கை

தனக்காக எதையும் இழக்க வைக்கவும் தெரியும்

எதற்காகவும் தன்னை இழக்காமல்

இருக்க வைக்கவும் முடியும்

இத்தகைய காதல் ஒருவரை எத்தனை முறை

 தீண்டிச் சென்றாலும் அதன் முதல் தீண்டல்

என்றுமே பசுமையாய் இருக்கும்

நம் அனைவரின் நினைவுப்பெட்டகத்திலும்.!!!!

This is entry #74 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.