பைத்தியமாய் மாறியிருந்த என்னை
பக்குவமாய் பார்த்துக் கொள்வாய் நம்பினேன்..!!
பலக்கதைகள் நான் பேசும் போது
அமைதி காத்தாய் பெருமையில் மிளிர்ந்தேன்..
என் பேச்சுக்கு மறுபேச்சில்லை உன்னிடம்
என் இஷ்டமே உன் இஷ்டம் கொண்டாடினேன்..
அழகிய நீரோடையில் சுழற்சியின் அறிகுறி
முதன் முறையே கதறி விட்டேன்..!!
பெரிதாகாமல் தடுக்க உன்னை
இறைஞ்சி கேட்டு கொண்டேன்..
இதமாய் தான் நீயும் சொன்னாய்
இருந்து விடுவாய் என்னோடு
இரும்பு பிடியாய் என் காதல் வைத்தேன்..!!
நம்பிக்கை நலிவு காண
உன் நடத்தை போதுமானதாய் இருந்தது..
மீண்டும் மீண்டும் கூறி கொண்டேன்
என்னவன் நீ..!! எனக்கில்லாமல் எங்கே போவாய்?!!
என்னடி உன் பைத்தியக்காரத்தனம்
நான் எங்கே போவேன் என்றாய்..
நல்லவன் நீ.. நாயகனே
உள்ளம் பூரித்து இருக்கையில்
பேரிடியாக என்னை தாக்கி
பெயர்த்தெடுத்து போனாய் உயிரை..
ஆனாலும் அரற்றவில்லை நான்
ஆதாரமாய் நீ இருப்பாய்..!!
ஆதாரம் ஏதும் இல்லாமல்
அழிந்த தடம் தேடி என்னை அலையவைப்பாய்?!
கனவிலும் நினைக்கவில்லை நான்..!!
ஐந்தாண்டு நான் சுமந்த காதல்
கருவொன்று கண் முன்னே அழிய
கதிகலங்கி தான் போனது எனக்கு..!!
குற்றுயிராய் அது துடிக்க
பொறுப்பேது எனக்கு என்றாய்?
உன் தகுதிக்கு ஈடில்லை நான்
விட்டுவிடடி போடி வாழ் என்கிறாய்??!!
முற்றிலுமாய் நானாய் வளர்த்துக் கொண்ட
கனவுகள் கண்முன் உலவுகிறது..
நினைத்திருந்தால் முடித்திருப்பேன்
உன் கையால் மூணு முடி முடிந்திருப்பாய்..!!
வேண்டாமென வீசிய பின்பு
பொன்னே என்றாலும் எனக்கெதற்கு?!
இதயத்தின் அடியில் என்றும்
படிந்திருக்கும் மீட்டெடுத்த என் காதல்..
உன் சூது இல்லா பெண் காதல்..
ஒரு அழிவின் விளிம்பில் நின்று
வந்து விட்டேன் நலமாய் இன்று..!!
வருத்தமில்லை துளியும் போய் வா
வருத்தப்பட உனக்கு சூழ்நிலைகள்
உருவாகும் பட்சத்தில்
உகுப்பாய் இரண்டொரு கண்ணீர்..!!
அதில் மினுக்கும் நீ அழித்த என் காதல்..!!
{kunena_discuss:785}