(Reading time: 14 - 27 minutes)

2017 போட்டி சிறுகதை 71 - நீ நான் அவன் - அம்ரித சாகரி

This is entry #71 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதையை தொடக்கத்தில் இருந்து தொடர்க.. / முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - அம்ரித சாகரி

Love

வணக்கம்

நான் chillzee.in வலைதளத்தில் உள்ள கதைகளை நிறைய முறை படித்துள்ளேன். நான் ஆன்லைன் – ல் படித்த முதல் கதை chillzee யில் இருந்தே. சமிப காலமாக என் தனிமையை போக்குவது கதைகள்தான். சிறு வயதில் இருந்தே எழுத பிடிக்கும். அப்பொழுது எல்லாம் எழுதி எழுதி கிழித்து விடுவேன். பள்ளி காலத்திலே எதாவது மனதை பாதித்த நான் படித்த கதையை என் தோழிகளிடமும் கூறியுள்ளேன். ரொம்ப நாளாகவே நாமளும் எழுத வேண்டும். நல்ல கதைகளை எழுத வேண்டும். படிக்கும் ஒவ்வொருவரும் இவங்க கதை ரொம்பவும் நன்றாக இருக்கும் என்று சொல்ல வேண்டும் என்ற பேராசை. நிறைய வலைதளத்தில் சிறுகதை போட்டி வந்துள்ளதை பார்த்திருக்கிறேன். ஆனால் எழுத தூண்டியது chillzee யே. கொடுக்கும் விஷயத்தை நல்லபடியாக கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்ததே இந்த கதை. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள். பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்

அம்ரித சாகரி

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது...

‘அழாத ரூபி அழவே கூடாது. இவங்களுக்கு நாம யாருனு காமிக்கணும்’ என்று தன்னைத்தானே திடப்படுத்திய ரூபா என்கிற ரூபன்யா மண்டப வாயிலை பார்த்தாள்.

‘சீக்கிரம் வந்துரு, நேரம் ஆக ஆக என்னால சமாளிக்க முடியாது’ என்று மனதோடு பேசிய ரூபா தன்னருகில் இருந்த தேவ்வை பார்வையிட்டாள், அவனோ ஐயர் சொல்லும் மந்திரத்தை கர்ம சிரத்தையாக சொல்லிக்கொண்டு இருந்தான்.

‘தலையெழுத்து இவனோட முடியல’ என்று மனதிற்குள் இவனையும் சேர்த்து வைதாள். தேவ் இவளை திரும்பி பார்த்து கண் சிமிட்டி புன்னைகைத்தான்.

‘அடியாத்தி, என்ன இவன்? என்னென்னமோ பண்றான்?’, என்று அதிர்ந்து அதற்கும் சேர்த்து வைதாள்.

‘எல்லாத்துக்கும் காரணம் அந்த ----- லூசு, வரட்டும் பேசிக்கிறேன், என்னை இப்டி தனியா பேச வச்சுருசே’ என்று அதற்கும் ஒரு பாட்டு பாடினாள் (அதுவும் மனசுக்குள்ள தான், வெளிய பாடினால் யார் கேட்கிறது, அவளின் குரல்வளம் அப்படி மேலும் பாடினால் பின்னாடி நிற்கும் அவள் தாயே அவளை கொன்று விடுவார்). திரும்பி தன் தாய் மஹாவை பார்த்தாள். அவர் இவளை முறைக்கவும் தன் தந்தை விஜயனை பார்த்தாள். அவரோ இவள் தாயை முறைத்து கொண்டு இருந்தார்.

‘நல்லா முறைக்குறாங்க, அட இவங்க தான முறை பசங்களாச்சே, பேசாம நாம இவனையே பார்ப்போம்’ என்று அதற்கும் அவள் மனதின் குரல் கவுன்ட்டர் கொடுத்தது. மறுபடியும் அருகிலிருந்தவனை பார்வையிட்டாள்.

‘ஆள் அழகா தான் இருக்கான், பேசாம நாமளே இவனுக்கு வாழ்க்கை கொடுத்தா தான் என்ன?’

“உன்னை கொலை பண்ணிருவேன்” ஒரு உருவம் நெஞ்சுக்குள் வந்து மிரட்டியது.

எவ்வளவு நேரம் பார்த்தாளோ, அருகில் இருந்த தன் சகோதரியின் தோழிகள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

“ரியா போதுமடி பார்த்தது, ஐயர் சொல்ற மந்திரத்தை கேட்டு திரும்ப சொல்லு. மாப்பிள்ளை சார் எங்கேயும் போகமாட்டாரு” என்று கூறினர்.

‘இவளுங்களுக்கு வேற வேலை இல்ல’ அதற்கும் தலையெழுத்தே என்று சிரித்து மழுப்பினாள்.

அவளின் தாயோ...

“வேடிக்கை பார்க்காம அங்க சொல்றத கவனி. இல்ல உன்னை கொன்னுட்டு தான் அடுத்த வேலையே எனக்கு’ பின்னால் இருந்து மாலையை சரி செய்வது போல் சிரித்துக்கொண்டே செல்லமாக அவரின் உடல் மொழியில் கொஞ்சினார். அரண்டு தான் போனாள் ரூபா ஆனால் எல்லா பயமும் உள்ளுக்குள்ளே தான் வெளியில் காண்பித்தால் அவளின் கெத்து என்னாவது? தன் தந்தையை கண் ஜாடையில் அழைத்தாள் ரூபா.

என்னவோவென்று அருகில் வந்த தந்தையிடம் ரகசியமாக “அப்பா இந்த கல்யாணத்துலயாவது வேற நல்ல, நாம சொல்ற பேச்சை கேட்குற பொண்ணா பாருங்கப்பா. நான் உங்களுக்கு கண்டிப்பா நல்லபடியா கல்யாணம் பண்ணி வைக்குறேன். இந்த லேடி வேணாம். ஓவரா பண்ணுது” என்று அவரின் பீபியையும் ஏற்றி அதற்கு பரிசாக தன் தாயிடம் கொட்டும் வாங்கினாள். தேவ்வோ இவளை மறுபடியும் பார்த்து சிரித்தான்.

‘டேய், என்னை நீயும் கடுப்பேத்தாத’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

“ரொம்ப புலம்பாத, சாரி மாத்த நீ உள்ள போகும்போது எல்லாம் சரியா இருக்கும்” என்று அசிரீரி போல் அவளுக்கு ஒரு குரல் கேட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.