(Reading time: 30 - 59 minutes)

தாமரைக்கு மனம் லேசானது போல் உணர்ந்தாள்... அவரை பார்த்தால் மட்டும் போது என்று நினைத்தவளுக்கு... அவரின் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்ததை குறித்து மனதில் நிம்மதி பிறந்தது... இதை நடத்தியதெல்லாம் பிரகாஷ் தான்... எல்லாம் இவளுக்காக தான் செய்திருக்கிறான்... இதற்கும் தன் பெற்றவர்கள் சம்மதித்ததற்காக மட்டுமே இவள் திருமணத்துக்கு சம்மதித்தாள்... அவனுக்காக இவள் நேரம் ஒதுக்கி சரியாக பேசியதுக் கூட இல்லை ஆனால் இவள் செய்த தவறை பெரிதுபடுத்தாமல், இவளை மணந்துக் கொள்ள நினைக்கிறான்... இவனை திருமணம் செய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவள், அவனை திரும்பி பார்த்தாள்..

ஆனால் அவனோ இவ்வளவு பெரிய காரியம் செய்தும் கூட துளியும் அலட்டிக் கொள்ளாமல் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்... அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள்... இன்னும் அவனை நெருங்கி உட்கார்ந்து, அவன் கையோடு இவள் கைக்கோர்த்து தோளில் சாய்ந்துக் கொண்டாள்...

இதுவரை அவனை தொட்டுக் கூட பேசாதவள், யோகியைப் பற்றி அந்த பெண்மணி கூறும்போது தான் வருத்தத்தில் அவளையே மறந்து இவன் கையைப் பிடித்திருந்தாள்... அவனே ஆச்சர்யமாக அப்போது அவளை திரும்பிப் பார்க்க, அதை கூட உணராமல் முன்னா பேசியதையே கேட்டுக் கொண்டிருந்தாள்... இப்போதும் எதையாவது நினைத்து வருத்தப்படுகிறாளோ... என்று அவன் திரும்பிப் பார்க்க, அவளோ இவனைப் பார்த்து புன்னகைத்து,

"ஐ லவ் யூ பிரகாஷ்.." என்றாள்.

பிரகாஷ்க்கு அதைக் கேட்டு ஆச்சர்யம்... காதல் என்ற பெயரில் அவள் வாழ்க்கையில் அவளுக்கு ஏற்கனவே காய்ங்கள்... அதையெல்லாம் மறைத்துக் கூட இவனை அவள் திருமணம் செய்திருக்கலாம்... ஆனால் அவள் உண்மையை மறைக்காமல் கூறினாள்... அதுவே அவள் மேல் அவனுக்கு இருந்த காதல் பன்மடங்கானது...

இவனை அவள் திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்தாலும், ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்பில் இவனை அவள் முழுமையாக நம்ப அவளுக்கு அவகாசம் வேண்டும்... அதனால் தான் அவளின் விலகலை கூட இவன் பொருட்படுத்தவில்லை... இவனும் அவளிடம் கண்ணியமாகவே நடந்துக் கொண்டான்... ஆனால் அவளின் தற்போதைய செய்கையும், அவள் கூறிய காதல் மொழியும் உண்மையிலேயே ஆச்சர்யத்தை கொடுத்தது... தன் மனம் கவர்ந்தவளின் மனதை இவனும் களவாடிவிட்டான்...

மனம் நிறைந்த மகிழ்ச்சியில், தோளில் சாய்ந்தவளை தன்னோடு சேர்த்தப்படி அணைத்து, "ஐ லவ் யூ டூ.." என்றான்..

நெஞ்சம் நிறைந்த காதலோடு, அவர்களுக்கு இந்த ரயில் பயணம் முழுவதும் இனிமையாக இருந்தது... அதே போல் வாழ்க்கை பயணமும் இனிமையாக இருக்கும்.

 

This is entry #79 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்புச் சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - சித்ரா.வெ.

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.