(Reading time: 12 - 23 minutes)

2017 போட்டி சிறுகதை 99 - நட்புக்குள்ளே காதல் - திவ்யா பிரபாகரன்

This is entry #99 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - திவ்யா பிரபாகரன்

Love

விடுமுறை நாளன்றும் கல்லூரி முழுவதும் மாணவர்கள் பரபரப்புடன் நடமாடிக்கொண்டிருந்தார்கள் .

இரவு  10 மணி. சிலர் ஆனந்தமும்  ஆர்ப்பாட்டமுமாய்  ஒரு புறம்.மற்றும் சிலர் கண்ணீரும் குழப்பத்துடனும்.

அவள் ஓடி வந்தாள். அவனிடம். "வருத்தப்படாத, இன்னும் நிறைய கம்பெனில இருந்து வருவாங்க. இது இல்லைனா இன்னொன்னு. எங்களைவிட நல்ல வேல கிடைக்கும் " என்றாள் பதட்டத்துடன்.

அவனோ அவள் கண்களை பார்த்தவாறு மனதில் ஏமாற்றம் இருந்தாலும் புன்னகையுடன் " பரவால்ல. தெரியும். பாத்துக்கலாம்… சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அங்கிள் வந்துருக்காங்கல. நீ பாத்து வீட்டுக்கு போ " என்று சொல்லிவிட்டு அவள் போகும் வரை பார்த்து பிறகு திரும்பிச் சென்றான்.

அந்த வேலை கிடைக்கவில்லை என்பதை விட அவளை  இனி பார்க்க முடியாததை எண்ணி கலங்கினான்.

நாட்கள் கடந்தன. மீண்டும் கல்லூரி தொடக்கம். இது அவர்களுக்கு கல்லூரியில் கடைசி இரண்டு மாதங்கள்.

முதல் நாள் .

ஆராதனா  வருகைக்காக காத்திருந்தான். அவள் உள்ளே நுழைந்ததும் அவனைக்கண்டதும் ஆர்வத்துடன் " என்னாச்சு !! " என்றாள். அவன் புன்னகையுடன் கம்பெனி பெயரை கூறினான். அவள் கண்ணில் தெரிந்த மகிழ்ச்சி அவனுக்கு இதமாக இருந்தது.

அன்று இரவு அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன்  " அப்பா, விமல்க்கு வேல கிடைச்சுருச்சு "என்றாள் ஆனந்தமாய்.

" அப்பறம் என்ன எல்லாரும் ஒண்ணா சென்னைல ஆட்டமா " என்றார் சமயலறையில் இருந்தபடி ஆராதனாவின் அப்பா. பிரபாகர். அவளுக்கு மட்டும் அல்ல அவளுடைய நண்பர்களுக்கும் செல்ல அப்பா.

ஆராதனாவிற்கு அப்பாவும் அவளுடைய நண்பர்கள் கூட்டமுமே அவளது உலகம்..

"தெரியலப்பா எல்லாருக்கும் சென்னை தானான்னு. இப்போ தான் அவன் சிரிக்கிறான். அன்னிக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. அவன் மூஞ்சிய சோகமா பாக்க சகிக்கல... இப்போ தான்  நிம்மதியா இருக்கு " என்றவாறு காலணிகளை கழற்றி சமயலறைக்குள் நுழைந்தாள். அடுப்பின் அருகே உள்ள திண்டின் மீது ஏறி " அப்பறம் என்ன  ஆச்சுன்னு கேளுங்க " என்று ஆரம்பித்தவள் சமையல் முடியும் வரை கதையை முடிக்கவில்லை.

"சொல்ல மறந்துட்டேன். அப்பா.. இன்னிக்கு திவ்யா.. "என்றவளை நிறுத்தி

" போதும் சாப்பிட்டு மீதி கதையை சொல்லலாம் " என்றார்.

சாப்பிட்டு படுக்கும் போது " புது வீட்டு வேல முடிஞ்சுடுச்சுடா. நீ சொன்ன மாரி ஹால்க்கு பிங்க் கலர் அப்பா சொன்ன மாரி மேல் மாடி ப்ளூ.

நாளைக்கு நீயும் ஒரு தடவ பாத்துட்டேன்னா பால் எப்ப காச்சிடலாம்ன்னு  முடிவு பண்ணிடலாம்டா." என்றார்.

" எப்போ நல்ல நாள்ப்பா"

" மூணு நாள் இருக்கு உன் நண்பர்கள் கூட்டம் எல்லாம் எப்போ வர

முடியும்ன்னு பாத்து சொல்லு அன்னிக்கே வச்சுக்கலாம் "

" சரிப்பா" என்றவள் பேசிக்கொண்டிருக்கும்போதே உறங்கினாள்.

றுநாள் வகுப்பறையில்

திவ்யாவுடன் பேசிக்கொண்டிருந்தவள் " சரி இரு வரேன் " என்று  வகுப்பறையின் மேடைக்கு சென்று " பிரண்ட்ஸ், ரொம்ப நாளைக்கு அப்பறம் எங்க வீட்டுல நடக்குற ஒரு சந்தோசமான விசேஷம். நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும். வந்தா நானும் அப்பாவும் ரொம்ப சந்தோசப்  படுவோம். அடுத்த வாரம் சண்டே காலை 10மணிக்கு. "

என்று கூறி இறங்கிவந்தாள்.

ஆராதனா வெளியே சென்றவுடன்,  அவன் திவ்யாவிடம் " ஒய்! ஆராதனாக்கு என்ன குடுக்கலாம் " என்றான் .

"நினைச்சேன். அவ சொன்னதும் ஓடிவந்துடுவியே.. வீட்டுக்கு தான்டா  பால் காச்சுறாங்க... அவளுக்கு இல்ல....போடா.." என்றாள் நக்கலாக.

" சரி நீ அன்னிக்கு வேடிக்க பார்த்தியே அந்த பையன் எந்த கிளாஸ்ன்னு சொல்லலாம்ன்னு வந்தேன்...." என்று இழுத்துக்கொண்டே நகர்ந்தான் ..

" நில்லுடா …யானை பிடிக்கும்டா அவளுக்கு...ஒய்! எந்த கிளாஸ்ன்னு சொல்லிட்டு  போடா .." என்று அவள் கத்த, அவன் சிரித்துக்கொண்டே சென்றான்.

ஞாயிறு காலை 10மணி. ஆராதனா வீட்டில்

" ஏ!! எரும !! எங்கடி இருக்கீங்க எல்லாரும் " என்றாள் திவ்யாவுக்கு போன் செய்து.

"5 நிமிசத்துல அங்க இருப்போம் எல்லாரும். ஒரு பெரிய கும்பலே வருது .வை " என்றாள் .

" அப்பா!!!

" வாங்கடா. எல்லாரும் வாங்க. “என்று வாசலுக்கு ஓடி வந்தார் ஆராதனாவின் அப்பா.

“ஹாய் அங்கிள். ஆமா நீ ஏன்டி கண்ணாடி போட்டுருக்க " என்றாள் திவ்யா .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.