ஒரே ஆட்டம் பாட்டம் என இரண்டு மணி வரை பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்ந்தது. விமல் கொடுத்ததாக திவ்யா பரிசை நீட்டினாள். அதை பிரிப்பதற்குள் போன் வந்தது. விமல் தான். எடுத்தவுடன்
" ஹாப்பி பர்த்டே ஆராதனா” என்றான்.
அவன் குரல் கேட்டு ரசித்து " நீ இன்னுமா தூங்கல" என்றாள் கடிகாரத்தை பார்த்தபடி .
"உன்ட பேசிட்டு படுக்கலாம்ன்னு தான் "என்று இழுத்தான்.
"சரி. நீ குடுத்தது இன்னும் நான் பிரிச்சு பாக்கல. அஞ்சே நிமிஷம் நீ வை நான் பாத்துட்டு கூப்பிடுறேன்."
என்று சொல்லி வைத்துவிட்டு கவரை பிரிக்க தொடங்கினாள்.
இனியும் சொல்லவில்லை என்றால் சொல்லாமலே போகவேண்டிய நிலை வரக்கூடும் என்று எண்ணி தான் இதுவரை அவளிடம் சொல்ல நினைத்ததை எல்லாம் மொத்தமாக எழுதி அனுப்பிடவேண்டும் என்று முடிவு செய்து மெயில் அனுப்பிய அடுத்த நொடி ஆராதனா விடம் இருந்து போன் வந்தது..
தயக்கத்துடன் " ஹலோ " என்றான்.
மறுமுனையில் மௌனம்.
குறைந்தது இரண்டு பக்கமாவது எழுதி இருப்போம் அதை ஒரு நொடியிலா படித்து முடித்திருப்பாள் என்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க
" இப்போ என்ன சொல்ல வர " என்றாள் ஆராதனா.
" அனுப்பினதை படிக்கலையா இல்ல பிடிக்கலையா " என்றான்.
"முழுசா படிக்கல. கடைசி லைன் பார்த்ததும் கூப்பிட்டேன். அப்படினா என்ன.
கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறியா " என்றாள் ஆராதனா சிரித்துக்கொண்டே.
அவளது சிரிப்பின் அர்த்தம் அறிந்து
" எங்க ஊருல அதுக்கு அதான் அர்த்தம். அங்க எப்படி " என்றான் நக்கலாக.
"அப்போ சரி எனக்கு ஓகே " என்று கூறி வைத்துவிட்டு தடபுடலாக திவ்யாவை எழுப்பினாள்.
அதே நேரம் விமலிடமிருந்து திவ்யாவிற்கு போன் வந்தது. போனை எடுத்த திவ்யா
" என்னடா. சொல்லு” என்றாள்.
மறுமுனையில் அவன் சிரிப்பைக்கேட்டு
“எதுக்குடா சிரிக்குற…”
“அட சொல்லித்தொலையேன்டா... “என்றாள் திவ்யா.
எதிரில் நின்ற ஆராதனா வெட்கத்தோடு அவளை கட்டிக்கொண்டாள்.
அவனது சிரிப்பின் காரணம் அப்போது புரிந்தது அவளுக்கு.
இதுவரையில் விமலுக்கும் ஆராதனாவிற்குமான அழகிய நட்பில் இன்று முதல் காதலும்..
This is entry #99 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை
எழுத்தாளர் - திவ்யா பிரபாகரன்
{kunena_discuss:1083}