(Reading time: 14 - 27 minutes)

மேலும்,

ஆதிக்க உயிரிகளான மனித உயிர்களின் செயல்பாடுகள் பூமிக்கு மிக பெரிய விளைவை உண்டாக்கும் வகையில் இருப்பதினாலும், மற்ற உயிரினங்களின் இன அழிவு விகிதங்கள் அதிகமாகி உள்ளதாலும், இயற்கை சுற்றுசூழலுக்கு எதிராக இருப்பதாலும் இந்த மின்னஞ்சல் ஒரு  மிகப்பெரிய எச்சரிக்கையாக அனுப்பப்படுகிறது... 

பூமியின் பேரழிவும் மற்ற கிரக வாசிகளின் பேரழிவும் மனித உயிரிகளின் செயல்பாடுகளின் விளைவுகளால் இருப்பதால், இனி வரும் காலங்களில் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு நற்செயல்முறைகளும் மனித இன அழிவிற்கு சாத்திய கூறாக அமைய நேரிடும் என்பதை கண்டிப்போடு வற்புறுத்துகிறோம் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்ததை மகிழொளி படித்து  வாயடைத்து செய்வதறியாமல் வியந்து இருந்தாள்..! 

மாசி மாதம் 12ஆம் தேதி, ஸ்ரீ துர்முகி ஆண்டு, கலியுகம் 5117. (February 24, 2017)

"அப்பா, இந்த கதையோட முடிவு என்ன.. அப்படி என்ன தான் இந்த மனிதர்கள் பண்ணிட்டு இருக்காங்க..  என்ன என்ன பிரச்சனைகள் இருக்கு இந்த பூமியில.. எப்படி தான் சரி பண்றது அதுலாம் சொல்லுங்க பா.. எப்படி..? நான் என்ன பண்ணனும் சொல்லுங்க " என்று குட்டி மேகவதி தன் அப்பா துருவிடம் துருவி துருவி கேட்க...

அதற்கு துருவ், ஹாஹாஹாஹா என முதலில் சிரித்து வைத்தான்.. உனக்கு கதை புரிஞ்சதா முதல்ல ...? எனக்கே அங்க அங்க தூக்கம் வந்துடுச்சு... நீ கேள்வி வேற கேக்கற.. 

நம்ம சிந்தனைகள் நல்ல நோக்கத்திற்காக பொது நலத்தோட இருந்தாலே போதும் குட்டி.. எல்லாம் சரி ஆகிடும்.. இந்த உலகத்துல இருக்கிற எல்லா மனிதர்களும் இந்த மாதிரி சிந்திக்க மாட்டாங்க.. ஆனா அப்படி எண்ணங்களை கட்டுப்படுத்தி சிந்திக்க வைக்க தெரிஞ்சக்கிட்டு மத்தவங்களுக்கு கத்துகுடுக்கணும்.. அப்பவே சரியாக ஆரம்பிச்சிடும்..  என துருவ் சொல்லும்போதே... 

ஹம்ம்கும் இதுக்கு கதையே கொஞ்சம் நல்லா புரியுது என மேகா குழம்பி செல்லமாக திட்ட... 

பள்ளிக்கூடத்துல நீ கதை போட்டியில் சேரனும்னு சொன்ன.. அதான் இத கிறுக்கி வச்சிருக்கேன்.. கொண்டு போய் சப்மிட் பண்ணு.. டீச்சர் ஏதும் கேள்வி கேட்டா எங்க அப்பா தூக்கத்துல எழுதினாங்கனு சொல்லி தப்பிச்சிடு.. ஹாஹாஹாஹா என வாய்விட்டு சிரித்தான் தன் மகளோடு.. !

சரி என்ன தலைப்புனு சொல்லுங்க பா.. !

"நலம், நலம் அறிய ஆவல்" னு வச்சிக்கலாம்.. !

பூமியோட நலம் தெரிய நாமளும் நம்ம நல்ல சிந்தனை மற்றும் செயலோடு காத்திருப்போம் குட்டி..!

தனக்குள் மறைந்து கிடந்த தமிழ் ஆர்வத்தை தன் நட்பின் மூலம் தூண்டி, எண்ணற்ற படைப்புகளை உலகிற்கு தந்த அகிலனும், இந்த கதை எழுதிய நானும் முன்னாள் கிரகவாசியான அகிலனின் தோழர் செழியனுக்கு சமர்ப்பிக்கிறோம்...!   நன்றி Chillzee...! மற்றுமொரு வாய்ப்புக்கு நன்றிகள்..!  நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..! 

நலம்..!  நலம் அறிய ஆவல்..!

This is entry #119 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம்.. நலம் அறிய ஆவல்..

எழுத்தாளர் - ஷக்தி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.