(Reading time: 13 - 25 minutes)

ண்களில் கண்ணீர் துளிர்க்க... 'தனுவுக்கு நான் தான் கடைசியா சாப்பாடு வாங்கிக்கொடுத்தேன் கண்மணி... அன்னைக்கு நீங்க பொன்னுங்க யாராவது இருந்திருந்தா அவக்கிட்ட பேசியிருக்கலாம்...புதுசா ஜாயின் பண்ண ரெண்டு பொன்னுங்க தான் இருந்தாங்க... நானும் இன்னோரு பையனும் தான் இருந்தோம்... ஏன்னா ஆப்பிஸ் பக்கத்துல இருக்கவங்க வேணும்னா முடிஞ்சா போகலாம்னு தானே சொல்லியிருந்தாங்க... நாங்க நாலு பேரும் பக்கத்துல நடக்கற தூரத்துல தானே இருக்கோம்... அதனால வந்தோம்... ஆனா இந்த தனு வீட்ல இருக்க முடியலை அதனால கிளம்பி வந்தேனு சொன்னா!' என்றான்.

ஐய்யகோ என்று இருக்கிறது எனக்கு! செவ்வாய்கிழமை வந்திருந்தால் அவளிடம் பேசி... பிரச்சனையை சரி செய்திருக்கலாமோ... இந்த சம்பவம் நடக்காமல் தடித்து இருக்கலாமோ' என்று உடைந்தது மனம். அதுவும் அந்த குட்டி தேவதையின் முகத்தை பார்க்கும் போது சித்தமே கலங்கிவிட்டது!

என் தனுவின் வாழ்க்கையை திருப்பி பார்க்கும் போது... ஒரே ஒரு வரி மட்டும் ஓடிக்கொண்டேயிருக்கிறது...

கண்மணியே.... காதல் என்பது.... கற்பனையோ??? காவியமோ???' தனுவின் காதல் கற்பனையில் கலைந்த ஓவியம் போல் ஆனது!

தாய் இருபதுகளில் அனுபவித்த மன உளைச்சளை இந்த பிஞ்சு மனம் இந்த வயதிலிருந்தே அனுபவிக்க வேண்டுமா??? சிந்தியுங்கள்! உயிர் துறப்பு என்பது மன அழுத்ததிற்கு வடிகால் அல்ல! இன்னும் ஒரு பெரும் துயருக்கு வித்திட்டு இருக்கிறது! தாயுமில்லாமல் தந்தையும் இல்லாமல் தற்போதை சூழலில் அந்த பெண் பிள்ளை எப்படி தனியே துணிசலாய் வளரப்போகிறாள்?? என்பது விடையறியா கேள்வி. ஒரு பெண்ணிற்கு... குடும்ப தலைவிக்கு உடல் நலனும் உள்ளத்தின் நலனும் மிகவும் இன்றியமையாதது! அவள் குடும்பம் நலம் பெற அவளது நலன் அவசியம்! அதற்கான வழிகளை தெரிவது தான் தற்போதய அவசரம்! 

என் மனோ பெண்ணே! என்றும் உன் நலம் நலமறிய ஆவல்!!!

This is entry #151 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - நீலா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.