(Reading time: 7 - 14 minutes)

இதற்குள் இங்கு நடப்பதை மதிக்கும், சந்திரனுக்கும் வாட்ஸப்பில் அனுப்பினாள் பாரதி. தான் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வருவதாகவும் அதுவரை அவர்களை வெளியில் போகாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் மதியிடமிருந்து பதில் வந்தது.

அந்த ரவுடிகள் சொன்னதை செய்ய முடியாது என்று மயூரியும், அவள் தாயும் மறுக்க அவர்களில் ஒருவன் மயூரியின் கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தான்.... அதற்கு மேல் பொறுக்கமுடியாத சாரங்கன் அறையிலிருந்து வேக வேகமாக வந்து அந்த ஆளை எட்டி ஒரு உதை உதைத்தான். ஏற்கனவே போதையில் இருந்தவன் சாரங்கன்  அடித்த அடியில் சுருண்டு விழுந்தான்.  அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மயூரியும், அவள் அன்னையும் சாரங்கனைப் பார்த்தார்கள்.

“டேய் எந்திர்றா தைரியம் இருந்தா இப்போ அவ மேல கை வை பார்க்கலாம்... எவன்டா அது இந்த வீட்டுக்கு மாப்பிளையா வரணும்ன்னு ஆசைப்பட்டது... முன்னாடி வாடா....”

“ஏய் யாருடா நீ.... எப்படி உள்ளாற வந்த.... இன்னா நடக்குது இந்த வீட்டுல... நீ, உன் வீட்டுக்காரர், உன் பொண்ணு மூணு பேர்தான் இங்க இருக்கறதா சொன்னாங்க..... இவன் யாரு புதுசா...”

“ஹான் இந்த வீட்டு நிஜமான மாப்பிள்ளை....”,சந்தடி சாக்கில் சாரங்கன் அடித்துவிட மயூரி கண்ணை ஆகாயம் வரை உயர்த்தினாள்... பாரதிக்கு உள்ளறையில் சிரிப்பு தாங்கவில்லை.

“என்னது பாப்பாக்கு கல்யாணம் ஆகிடுச்சா.... இதை யாரும் சொல்லவே இல்லையே....”

“உன்னைய மாதிரி பீப்பாக்கிட்டல்லாம் சொல்லிட்டுதான் நாங்க கல்யாணம் பண்ணிக்கனுமா என்ன.... அடுத்த வாட்டி பண்ணிக்கும்போது பத்திரிக்கை வச்சு கூப்பிடறோம்.... இப்போ என்ன பண்ற உன்னை யாரு அனுப்பினா,,, என்ன விஷயம்ன்னு சொல்லு பார்க்கலாம்....”

“ஹாஹாஹா இங்க பாருடா.... தம்பி டீடைலு கேக்கறாரு.... உன்னாண்ட சொல்லத்தானே காத்துட்டு இருக்கோம்...  எங்க கையால வெத்தல பாக்கு போடாம அப்படி ஓரமா உக்காந்து என்ன நடக்குதுன்னு பாரு தம்பி....”, அடுத்த ரௌடி பேச அவன் மூக்கில் ஓங்கி ஒரு குத்து குத்தினான் சாரங்கன்.  அடி வாங்கியவன் மூக்கைப் பிடித்த நேரம் அழைப்பு மணி அடித்தது.

தொடரும்

Episode 17

Episode 19

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.