“நீங்க ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கப் போறீங்க. நான் எதுக்கு பூஜை வேளைக் கரடியா? நான் ஸ்கூட்டியை எடுத்துட்டுப் போயிட்டேன்னு அவகிட்ட சொல்லிடுங்க.”
சொல்லிவிட்டு பறந்துவிட்டாள்.
அவன் தயக்கத்துடன் வீட்டின் வெளிக்கேட்டின் மீது கை வைத்தான்.
அது திறந்து கொண்டது.
தயக்கத்துடன் கதவருகில் சென்றவன் அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவு திறக்கும் வரையில் அவன் அவனாகவே இருக்கவில்லை. இது அவளது வீடாகத்தான் இருக்க வேண்டும். மனதார வேண்டிக்கொண்டான்.
பொறுமையில்லாமல் மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவு திறந்தது. மூச்சை இழுத்துப்பிடித்தவாறு நின்றிருந்தான்.
கதவைத் திறந்தவரை ஆர்வத்துடன் பார்க்க அங்கே ஒரு சிறுமி கதவைத் திறந்துவிட்டு நின்றாள். அவன் என்ன செய்வதென்றது திகைத்தது ஒரு நி
...
This story is now available on Chillzee KiMo.
...
>அவனுக்குத் தேநீரை நீட்டிய தென்றலின் கரங்களில் நடுக்கத்தை உணர்ந்தவன் அவள் முகத்தை நோக்கினான்.
அவள் அவன் முகத்தை நேரே பார்க்காமல் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள்.
அவளை இழுத்து அணைக்கத் துடித்த மனதைக் கட்டுப்படுத்தியவன் தேநீர் கோப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு மகளைப் பார்த்தான்.