(Reading time: 12 - 24 minutes)

“ஒரு வக்கீலைப் பார்த்து வாய் பேசாதன்னு சொல்றீங்களே... இது ஞாயமா தர்மமா..... உங்க கேள்விக்கு பதில்,  இப்போ வர்றது கஷ்டம் ராஜா... ACP பார்க்கப் போறேன்..... அப்படியே ஒரு கேஸ் விஷயமா கிளையன்ட் பார்க்கப் போகணும்..... ஈவினிங் ஆறு மணிக்கு மேல வேணா வர்றேன்...”

“ஓ அப்போ எனக்கு கிளாஸ் எடுக்கணும் பாரதி... சரி நான் நைட் கால் பண்றேன் அப்போ பேசலாம்.....”

“ஹே வெயிட் பண்ணுங்க... நீங்க முதல் முறை கேட்டு மறுக்க கஷ்டமா இருக்கு... ஒண்ணு பண்ணலாம்.... ACPயை பார்க்க அவர் வீட்டுக்குத்தான் போறேன்..... அவர் வீட்டுப் பக்கத்துலையே ஒரு ஹோட்டல் இருக்கு.... நீங்க அங்க வந்துடுங்க... நான் உங்களுக்கு அட்ரஸ் வாட்ஸ்அப் பண்ணுறேன்....”

“பாரதி உன் வேலையை கெடுத்துட்டு வராத... நாம இன்னொரு நாள் கூட பார்க்கலாம்... இல்லைன்னா அம்மாவை கிளாஸ் எடுக்க சொல்லிட்டு நான் வரேன்... நாம சாயங்காலமே பார்க்கலாம்....”

“ஒண்ணும் பிரச்சனை இல்லை ராஜா.... ஆன்ட்டிக்கே இப்போதான் கால் கொஞ்சம் சரியாகி இருக்கு... இதுல நின்னுட்டே கிளாஸ் எடுக்கறது கஷ்டம்.... ACPயை இப்போ பார்க்கிறதுக்கு பதிலா இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு பார்க்கப்போறேன்.... .அதனால ரொம்பக் கவலைப்படாம நீங்க வாங்க....”, பாரதி ராஜாவிடம் பேசிவிட்டு, மதியிடம் ஒரு மணிநேரம் கழித்து வருவதாகக்கூறி அங்கிருந்து கிளம்பினாள்.

நாராயணன் மிகக்கோபமாக அவரின் வீட்டின் அலுவலக அறையில் நடந்து கொண்டிருந்தார்.

“ஏன்யா அந்த இன்ஸ்பெக்டர் எத்தனை மணிக்கு வரேன்னு சொன்னான்...”

“இதோ இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவாருய்யா....”, அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இன்ஸ்பெக்டர் அந்த அறைக்குள் நுழைந்தார்.

“வாய்யா இன்ஸ்.... உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் ஆளையே தூக்கி உள்ளாற வைப்ப....”

“சார் அது அன்னைக்கு வேற வழி இல்லாம போச்சு சார்.... திடீர்ன்னு அந்த ACP அங்க வந்து நிப்பாருன்னு எதிர்பார்க்கலை... அந்தப் பொண்ணு மேல ஏதானும் வழக்கு போட்டு அவங்களை மிரட்டி வழிக்குக் கொண்டு வரலாம்ன்னு நினைச்சேன்.... அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சு... அதுவும் அங்க நடந்தது அந்த ACPகைல வீடியோவா வேற போய்டுச்சு... அதுக்கு மேல கைது பண்ணலைன்னா பெரிய பிரச்சனை ஆகிடும்... அதுதான்....”

“நல்லா சாக்கு சொல்றயா... இனி நீ கேக்கற மாமூலுக்கும் நான் இதே மாதிரி கதை சொல்லுறேன்..... அது சரி யாருய்யா அந்த வீட்டுல இருந்த ஆளு... அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகலைன்னு இல்லை கேள்விப்பட்டேன்.....”

“அது சாரங்கன் வக்கீல் சார்... சரியா பேஜார் பிடிச்ச பயல்.... அவன்தான் அந்தக் கேஸ் file பண்ணினதுக்கூட.... ACPக்கும் அங்க நடந்ததை அவன்தான் மெசேஜ் பண்ணி இருக்கணும்.... இந்தக் கேஸ் நடத்தப்போறது அவனோட சீனியர் லாயர் சந்திரன்.....”

“அவரு பெரிய வக்கீல் ஆச்சேய்யா... அவரைப் பிடிக்கற அளவு இவங்க பெரிய ஆள் இல்லையே....”

“ஒரு வேளை அந்த சாரங்கன் அந்தப் பொண்ணுக்கு பார்த்திருக்கற மாப்பிள்ளையா இருக்குமோ ஐயா..... அதுனால அந்த சந்திரன் இந்தக் கேஸ் எடுத்து இருப்பாரா....”,மேனேஜர் கூற, நாராயணன் இன்ஸ்பெக்டரைப் பார்த்தார்.

“எனக்கு என்னவோ அப்படி தோணலை சார்... அவன் நேத்து அந்த ஆளுங்களை திசைதிருப்ப சும்மா சொல்லி இருப்பான்னு நினைக்கறேன்... சாரங்கன் அந்த வீட்டு மாப்பிள்ளைன்னா மொதோ வாட்டி அவங்களை மிரட்டின உடனேயே அவன் கேஸ் போட்டிருப்பான்... இத்தனை நாள் வெயிட் பண்ணி இருக்க மாட்டான்.....”

“நமக்கு இது கொஞ்சம் கஷ்டம்தான் சார்... அந்த சந்திரன் ஒரு கேஸ்ல இறங்கிட்டார்ன்னா எதிராளியை அவனே குற்றத்தை ஒத்துக்கொள்கிற வரை விடமாட்டாரு... இந்த சாரங்கனும் சாதாரண ஆள் இல்லை... எப்படியோ கேஸ்க்கு வேண்டிய அத்தனை எவிடென்ஸும் சேகரிச்சுடுவான்.... போதாத குறைக்கு அவருக்கு இன்னொரு ஜூனியர் இருக்குது.... அது பேர் பாரதி... அது சாரங்கனுக்கு மேல....”

“ஹ்ம்ம் ரொம்ப நாள் ஆச்சுய்யா இந்த மாதிரி ஒரு எதிராளிக்கூட மோதி... பார்த்துருவோம்... நானா இல்லை அந்த சந்திரனா அப்படின்னு... உங்கிட்ட அந்த வக்கீலோட டீடைல்ஸ் எடுத்துட்டு வர சொன்னேனே... எங்க அது....”

“இந்தாங்கய்யா... இதுல அவங்க மூணு பேரோட டீடைல்ஸுமே இருக்குது....”

“யோவ் மேனேஜர் நீ நம்ம நட்டைக் கூப்பிட்டு இந்த  டீடைல்ஸ் அவன் கைல கொடுத்து மூணு பேரையும் ஒரு ரெண்டு நாளைக்கு கண்காணிக்க சொல்லு....இன்ஸு இப்போ அந்த ஆளுங்க நேத்து அங்க போனதுலேர்ந்து நடந்ததை அப்படியே விலாவாரியா சொல்லு....”, நாராயணன் கேட்க, இன்ஸ்பெக்டர் அங்கு நடந்ததை முழுவதும் கூற, அடுத்து என்ன செய்வது என்று இருவரும் விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

தொடரும்

Episode 20

Episode 22

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.