(Reading time: 9 - 18 minutes)

ன்னாச்சு ஸார் ?!

பெங்களூரில் நடந்த விபத்தில் அதுதான் மாயாமாதிரியே இருந்த சுப்ரியாவின் விபத்தில் ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு, மாயாவும், கூட இன்னொரு ஆளும் டாக்ஸி ஒன்றை வைச்சிகிட்டு கிளம்பியிருக்காங்க அந்த வண்டிதான் விபத்திற்குள்ளாயிருக்கு, ஹோட்டல் மூலமா வண்டி புக் ஆகியிருக்கிறதால் இறந்து போன அந்த டிரைவரைப் பற்றி விசாரணையை ஆரம்பிக்கச் சொல்லியிருந்தேன். வண்டிதான் வாடகையே தவிர்த்து வண்டியில் பயணித்த ஆளுக்கும் டிரைவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு, ஒரு பெண்பித்தனா இருந்தவனுக்கு பெண்கள் சப்ளை பண்ற வேலையும் அந்த டிரைவர் பார்த்திட்டு இருந்திருக்கான். இப்போ அவனைப் போலவே அவனோட கூட்டாளி ஒருத்தன் சிக்கியிருக்கான் ஸோ அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரிய வாய்ப்பிருக்கு ! அதனால முதல்ல அந்த விசாரணைதான் நமக்கு முக்கியம்.

ம்....வீரா ஸார் டிரைவர் மணி மேல் எந்தத் தப்பும் இல்லை

எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க கமல்.

நாம இப்போ தனியாதான் இருக்கோம் என் சொந்தபேர் வைச்சே கூப்பிடலாமே ஏன்னா எனக்கே என் பெயர் மறந்திடும் போலயிருக்கு !

சரி சரி சொல்லுங்க கெளதம் மாயாவோட கைப்பட எழுதின ஒரு கடிதம் அவங்க லாக்கரில் இருந்து எனக்கு கிடைச்சது அதையெடுத்துகிட்டு உங்களைப் பார்க்க வரலான்னு நினைச்சேன் அப்போதான் குறுக்கே துரை விஷயம் வந்திட்டது.

சரி அந்தக் கடிதத்தை என்னிடம் தாருங்கள் நான் அப்பறம் படிக்கிறேன் இப்போ கமல்கிட்டே சொல்லிட்டு நாம பெங்களூரு போகிறோம் அங்கே நமக்காக அசோக் காத்திருக்கார்.

பயணம் வெகு வேகமாக ஒரு விடியலை நோக்கித் தொடங்கியது.  

மாயா வருவாள்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.