(Reading time: 11 - 22 minutes)

“பத்திரம் பாலு.. அவ இயற்கையா செத்தமாதிரி பார்த்துக்கோ..”

“சரி அண்ணா..”

“சரி போ..” என்றவன் தன் அறையினுள் நுழைந்தான்..  தனது பீரோவிலிருந்து கவரை எடுத்தவன் அதனுள் இருந்த போட்டோவிடம் பேச ஆரம்பித்தான்..

நந்தினி.. இல்லை.. இல்லை.. நகநந்தினி தேவி..ஆதிநாதனின் மனைவி.. இப்போ கணவனையும் இழந்து, விதவையாகி, குழந்தையையும் இழந்து பல துன்பம் அனுபவிச்சிட்டயே.. பாவம் என பரிதாபபட்டவன் கொடூரமாய் சிரித்தான்..

ஆதிநாதனை நான்தான் கொன்றேன்.. உன் பெண்குழந்தையையும் கொன்னுட்டதா தான் நான் நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா இந்த மனோகர் என்னை ஏமாற்றிவிட்டான்.. அவன், பிரசவத்தில்இறந்து போன தன் பொண்ணையும் உன் பொண்ணையும் மாற்றி வைத்துட்டான்.. என்ன ஒரு பிளான்.. இது தெரியாம என் ஆளுங்க இங்குபெட்டர்ல இருந்த இறந்துபோன குழந்தையை கவனிக்காம, இங்குபெட்டரை செயலிழக்க வைத்து மூச்சு விடாம பண்ணிட்டோம்னு என்கிட்ட சொன்னாங்க.. நானும் அடுத்தநாள் உன் குழந்தை இறந்து போன நியூஸ கண்டு கன்பார்ம் பண்ணிட்டு நிம்மதியா இருந்தா.. 16 வருசத்துக்கு அப்புறம் உன் சாயலில் ஒரு பொண்ணை பார்த்து சந்தேகப்பட்டு விசாரிக்கும்போதுதானே தெரியுது, இன்னும் உன் பொண்ணு சாகலனு.. கவலைப்படாதே நந்தினி, உன் பொண்ணை கூடிய சீக்கிரம் உன் கணவன்கிட்டயே அனுப்பி வைத்துடறேன்.. நீ எப்பவும் நல்ல வாழ்க்கையை வாழ முடியாது.. வாழவும் கூடாது என அடிக்குரலில் அழுத்தமாக பேசியவன் சத்தம்போட்டு சிரித்தான்..

அவன் அடியாளான பாலுவும் அன்றிரவு விக்ரம் பங்களாவுக்குள் நுழைந்தவன் அமிர்தாவின் அறைக்குள் சத்தமில்லாமல் நுழைந்தான்.. அவ்வறையின் ஏசியில் சில வேலைகளை செய்தவன் சத்தமில்லாமல் அவ்வறையை விட்டு வெளியேறி பங்களாவை விட்டு வெளியே சென்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்..

விக்ரம் தன் அறையினுள் நுழைந்தான்.. காலையிலிருந்து செய்த ஆபிஸ் ஒர்க்கில் களைத்துபோயிருந்தான்.. பின் தன் மொபைலில் இருந்த அமிர்தாவின் போட்டோவை ஆசையுடன் பார்த்தான்.. பின் போட்டோவை பார்த்து பேச ஆரம்பித்தான்,

“ஹேய் முயல்குட்டி.. இப்போ தூங்கிக்கிட்டு இருப்பனு எனக்கு தெரியும்.. நீதான் கும்பகர்ணனின் மறுஜென்ம பிறவி ஆச்சே.. காலையில அப்படி தான் இடிப்பயா.. நானே காலேஜ் படிக்கிற பொண்ணுனு அமைதியா இருந்தா என்னை தூண்டிவிடுறயா.. உனக்கு மேஜர் வயசு வரட்டும்.. நீ என் லவ்வுக்கு சம்மதம் சொல்லட்டும்.. அப்புறம் இருக்குடி உனக்கு.. ஐயா ரொமான்ஸ்ல நீ வெட்கப்படுறத நான் பார்க்கதானே போறேன்.. என்னை இப்போ சீண்டுறதுக்கு வட்டியும் முதலுமா திருப்பி தரல நான் விக்ரம்வாசுதேவன் இல்ல.. சரி.. தூங்கலாம்.. அதற்கு முன்னாடி மித்ரா தூங்கிட்டாளானு பார்க்கனும் என்றவன் மித்ராவின் அறைக்கு சென்றவன் அறை காலியாக இருப்பதைக்கண்டு துணுக்குற்றான்.. பின் அமிர்தாவிடம் இருப்பாள் என எண்ணியவன்,  அமிர்தாவின் அறையை நோக்கி நடந்தான்..

சிறிது நேரத்திற்கு முன்..

அமிர்தா தூங்கிக்கொண்டு இருந்தாள்.. கனவு பயங்கரமாய் அவளுக்கு தோன்ற திடுக்கிட்டு விழித்தவள் பயந்துபோய் மித்ராவின் அறைக்குள் ஓடினாள்..

“மித்ரா..”

“என்னாச்சு.. ஏன் இப்படி பயந்துபோய் வர”

“எனக்கு கெட்ட கனவு வந்தது.. நான் சாகுறமாதிரி..”

“ஏய் லூசு.. நீயாவது சாகறதாவது.. நீ என்னை கொன்னுட்டுதான் நீ சாவ..சரி.. அழாத..பயப்படாதே.. வா.. இன்னிக்கு நைட் உன்கூட படுத்துகிறேன்”

“சரி வா” என்ற அம்மு மித்ராவைக்கூட்டிக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.. பயத்தில் வேர்த்ததால் ஏசியை ஆன் செய்தாள் அமிர்தா..பின் இருவரும் பேசிக்கொண்டே தூங்கினர்.. அப்போது  ஏசியிலிருந்து மெல்லிதாய் புகை வர தொடங்கியது..

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.