“இந்த அமைதி கிடைக்க, எவ்ளோ சத்தத்தை கடந்து வர வேண்டியதாக இருந்துச்சு?” வாய்விட்டு சொல்ல நினைத்ததை மனதிற்குள் சொல்லிக் கொண்டான் பிரபஞ்சன். அதைவேறு சொல்லி நண்பர்களின் முகவாட்டத்திற்கு காரணம் ஆக வேண்டுமா என்ன?
“என்ன மச்சி, நீயும் நம்ம கதிரு மாதிரி கவிதை எழுத போறியா?” என்று கார்முகிலன் கேட்கவும், கதிரவன் காலையில் எழுதிய கவிதையை சொன்னான்.
“இன்னும் அந்த காலம் மாதிரி கடலு மண்ணுனு ப்ளேடு போட்டுட்டு சுத்து நீ.. ஏன்டா உன் தேவதைக்கு நீச்சல் தெரியாதா? அலையை நம்புறதுக்கு பதிலா தேவதையே வரலாம்ல?”என்று கார்கி வழக்கம்போல வாயாட, பிரபா கரையோரம் எதையோ பார்த்து தூக்கிவாரி போட எழுந்து நின்றான்.
“பிரபா என்னடா?”
“மச்சி என்னடா?” என இருவரும் அவனை உலுக்க பிரபா கரையை நோக்கி ஓட, அங்கு கரையோரம் ஒரு பெண் மயங்கி கிடந்தாள்.
“டேய் யாரோ பொண்ணுடா” என்று கதிரவன் கத்த, மறுநோடி மூவருமே அவளைக் காப்பாற்றும் எண்ணத்தில் அவளைத் தூக்க முயன்றனர். கடல் அலைகளின் மோதலுக்குகூட கண்விழிக்காமல் கிடந்த அவள், சற்றுமுன் கோவிலில் கண்ணனிடன் வாக்குறுதி கேட்டவள் தான்! அவள் எப்படி அங்கு வந்தாள்? நம்ம ப்ரண்ட்ஸ் அவளை என்ன பண்ண போறாங்க? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
தொடரும்...
Go to Vellai pookkal ithayam engum malargave story main page
{kunena_discuss:1166}