“வருண் இன்னும் என்ன சார்ன்னு கூப்பிட்டுகிட்டு. ஒழுங்கா உறவு முறை வைத்து கூப்பிடு” என்று சுமித்ராவைப் போலவே குரலை மாற்றி வருணை அதட்டினாள் வர்ஷினி.
சிறிது நேரம் அங்கே பேச்சும் சிரிப்புமாக கழிய திருமண நாள் தேதிகளை குறித்துக் கொண்டு வந்ததை சுமித்ரா காண்பித்தார்.
“உங்களுக்கு எந்த தேதி சரியா வரும்னு பாருங்க”
கல்யாணம் மண்டபத்திலா ரிசப்ஷன் எங்கே. நிச்சயம் எப்போது செய்வது என்று அனைவரும் ஆலோசிக்க வர்ஷினி அனைத்தையும் ஒரேடியாக மறுத்தாள்.
“கல்யாணம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து சிம்பிளா ஒரு விருந்து கொடுத்திரலாம் எல்லோருக்கும். க்ளோஸ் பிரண்ட்ஸ் மட்டும் போதும் கல்யாணத்திற்கு”
“அம்மு என்ன மா இது” லக்ஷ்மி ராமசந்திரன் இருவரும் திகைக்க
“அவ சொல்றதில் ஏதேனும் காரணம் இருக்கும். என்னமா” என்று அவளிடம் கேட்டார் சுமித்ரா.
வர்ஷினி ராமைப் பார்க்க அவளுக்காக அவன் பதில் கூறினான்.
அதை கேட்ட அனைவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தனர்.
இதயம் துடிக்கும்
{kunena_discuss:1109}