தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 14 - தீபாஸ்
வர்ஷாவிற்கு அங்கு நடந்த கலவரத்தில் இருந்து ஒரு விஷயம் புரிந்தது .அவ்வாறு புரிந்த விஷயம் மாதேஷின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது .பிரச்சனை நடந்தபோது அவர்கள் பேசிய மொபைல், வீடியோபதிவு போன்ற வார்த்தைகளை கேட்டவளுக்கு ஆதித்துக்கும் மாதேசுக்கும் அழகுநிலாவிற்கும் இடையே வேறு ஏதோ பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பது வர்சாவிர்க்கு தெரியவந்தது .
மேலும் அழகுநிலா தன்னிடம் ஏதோ கூற வந்ததிற்கும் அந்த பிரச்சனைக்கும் தனக்கும் ஆதிதுக்கும் இடையில் நடக்கும் பனிப்போருக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ...? என்று எண்ணவைத்தது, அவசரபட்டு அழகுநிலா பேசவரும் போது கேட்காமல் விட்டுவிட்டோமோ..? நமக்கும் ஆதித்துக்கும் இடையில் பெரிய பள்ளத்தை நானே ஏற்படுத்தி கொண்டேனோ...! என்ற கலக்கம் அவளுக்கு உண்டானது.
அவள் முதன்முதலில் ஆதித் தனக்கு ப்ரபோஸ் பண்ணிய சூழ்நிலையில் அவன் தன்னிடம் மனம் விட்டுப் பேசிய சில வார்த்தைகள் நினைத்து பார்த்தாள்.
இருவரும் காதலை பரிமாறிக்கொண்ட நிமிடம் ஆதித் தன்னிடம் கூறினான், “வர்ஷா என் பேமிலி பற்றி இதுவரை யாரிடமும் நான் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்லப்போறேன், அது தெரிந்தபின் உனக்கு என்னை மேரேஜ் செய்வதில் எந்த அப்ஜெக்ஸனும் இல்லையென்றால் நம்ம லவ் லைப்பை தொடரலாம் என்று கூறினான்.
அதற்கு வர்ஷா “ஆதித் இதுவரை உங்களிடம் எந்த பெண்ணையும் நீங்க நெருங்க விட்டது கிடையாது என்னைப் போலவே கற்புள்ளவர்... மேலும் திறமையானவர். உங்களின் உழைப்பால் ஆளுமையால் இன்று ஒரு பிஸ்னஸ் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி சக்சஸ்சாய் நடத்திவரும் ஒரு தொழிலதிபர். உங்களின் இந்த சாராம்சம் எனக்கு போதும். மற்ற உங்களின் உறவுகளை பற்றி எனக்கு கவலை இல்லை என்றாள்.
ஓகே வர்ஷா இருந்தாலும் என் வாழ்கையில் இணையப்போகும் நீ இதை தெரிந்து கொள்ளனும் என்றவன், உனக்கு கோவையில் இருக்கும் பிரமலமான ஜவுளிகடையை கூறி அதன் உரிமையாளர் வேலாயுதத்தை பற்றி கேள்வி படிருகிறாயா? என்று கேட்டான் . வேலாயுதம் அந்த ஜவுளிக்கடை மட்டுமில்லாது மில் மற்றும் பல தொழில்கள் செய்பவராதலால் தமிழ்நாடு அளவில் அவரை பலர் அறிந்திருந்தனர். எனவே ம... கேள்வி பட்டிருக்கிறேன் என்று கூறினாள் வர்ஷா, “அவர் தான் என் அப்பா!” ஆனால் என் அம்மா அவருக்கு இரண்டாவது மனைவி என்றான் வேதனையுடன். ஆனால் அவருக்கோ எனக்கோ என் சம்பாதியத்திற்கோ எந்த சம்பந்தமும் நான் வைத்துக்கொள்ளவில்லை, அதேபோல் அவரின் சொத்துக்கோ மற்றதற்கோ அவரிடம் உரிமை எடுத்துக் கொள்ளவும் மாட்டேன். ஆனால் என் அம்மா என்னிடம் என் கல்யாணத்தில் அவரை சபையில் முன் நிறுத்திதான் அனைத்து ஏற்பாடுகளும் நடக்கவேண்டும் என்று கேட்டிருகிறார்கள் என்றான்
அவன் கூறியதற்கு வர்ஷா, நம்ம மேரேஜ் நல்ல படியாக நடந்தால் போதும். சோ! மற்றவை எனக்கு அவசியமில்லை என்று கூறியிருந்தாள்.
இப்பொழுது ஆதித்தை பார்த்து உங்க அம்மா புத்திதானடா உனக்கு இருக்கும் என்று மாதேஷ் கூறியதை கேட்ட வர்ஷா ஆதித்துகும் மாதேஷுக்கும் என்ன தொடர்பு இருக்கும் என்று யோசனையுடன் மாதேஷை பார்த்தாள்.
காரில் பின் சீட்டில் சட்டை முட்டியில் கிழிந்தும் உதட்டோரம் தடித்தும் கண் சிவந்தும் கலைந்த தோற்றத்தில் காரில் அமர்ந்திருந்த மாதேசிடம் வர்ஷா உங்களுக்கும ஆதித்துகும் ஏற்கனவே பிரச்சனையா...? அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்..? என்று கேள்விகேட்டாள்.
அதற்கு மாதேஷ் ஆதித்தின் மேல் இருந்த கோபத்தில் அவன் என் அப்பாவிற்கும் இன்னொரு பொம்பளைக்கும பிறந்த மகன் ஆதித் . என்று ஆதித்தின் பிறப்பைப் பற்றி வெறுப்புடன் பேசினான் மாதேஷ்
உடனே அப்போ கோவையில் உள்ள இன்டஸ்ரியலிஸ்ட் வேலாயுதம்தான் உங்க அப்பாவா? என்று கேட்டால் வர்ஷா,
அதற்கு “ஆம்” என்று கூறியவன், எங்க ஊரைவிட்டு அவனை ஸ்கூலில் கேவலப்படுத்தி துரத்தினேன் சென்னைக்கு வந்து பெரிய இவனாகிட்டா இவன் என்ன பெரிய பருப்பா, என் மேலேயே கையை வச்சுட்டான்ல... என்று அவனை கண்ணடபடி திட்ட ஆரம்பித்தான்.
அதனால் வசந்த் கூறினான், மாதேஷ் ஏற்கனவே அவன் கிட்ட மோதித்தான் இப்படி அடிபட்டு உட்கார்ந்திருக்க, நீ அவசரப்பட்டு அவன்கூட சண்டை போட்டதுனால இப்போ பிரச்சனை நமக்குத்தான். இனியாவது கொஞ்சம் யோசித்து அவனிடம் நடந்துக்கோடா! என்று இன்னைக்கு நடக்கவிருந்த பில்டிங் காண்டாக்ட் நின்றுவிட்ட கடுப்பில் கூறினான்.
மாதேஷ் கூறியதை கேட்ட வர்ஷாவிற்கு ஒன்று தெளிவானது, அன்று தன்னை பார்க்க வந்த ஆதித்தை வெறுப்பேற்ற, ஆதித்தின் குடும்ப எதிரியான மாதேசுடன் தான் கை கோர்த்து ஆடுவதை பார்த்ததினான்ல்தானோ ஆதித் தன மீது அத்தனை கோபப்பட்டானா? அவ்வாறு நான் அன்று மாதேசுடன் சேர்ந்து டான்ஸ் செய்து ஆதித்தை சீண்டாமல் இருந்திருந்தால் ஒருவேளை ஆதித் தனக்கு அவனின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்து தன்னுடன் இணைத்திருப்பனோ..? என்று நினைத்தாள்.
மேலும் அழகுநிலாவை சந்தித்து அவளிடம் அன்று நடந்த உண்மையை தெரிந்துகொண்டு, தவறு ஆதித்திடம் இல்லை என்றால், தான் ஆதித்தின்மேல் சந்தேகப் பட்டதற்கு ஆதித்தை நேரே சந்தித்து மன்னிப்புகேட்டு இருவருக்கும் இடையில் விழுந்த விரிசலை சரிசெய்யவேண்டும் என நினைத்தாள்.