(Reading time: 20 - 39 minutes)

அவளால் ஆத்தித்தை அவ்வளவு ஈசியாக தூக்கி எரிய முடியவில்லை, மேலும் மதேசுடன் ஏற்பட்ட சண்டையில் அவனின் வாயை அடைபதற்காக கூட அப்போதைக்கு அழகுநிலாவை தனது வருங்கால மனைவி என்று கேட்டதுக்கு ஆமாம் என்று சொல்லியிருக்கலாம் என நினைத்தாள் வர்ஷா, ஏனெனில் அழகுநிலாவின் எளிமையான தோற்றம் கண்டவள் அதை அழகுநிலாவின் வீக்னஸ்ஸாக நினைத்தாள். தான் போய் திரும்ப ஆதித்திடம் காதல் வார்த்தை பேசினால் தன்னிடம் ஆதித் திரும்பி வந்துவிடுவான் என்று தப்புகணக்கு போட்டாள்.

எனவே அடுத்து அழகுநிலவை பற்றி நைசாக மாதேசிடம் கேட்டு அவள் தங்கியிருக்கும் ஹாஸ்ட்டல் அட்ரஸ் தெரிந்துகொண்டவள் நேராக அழகுநிலாவை பார்க்க அவளது விடுதி நோக்கி விரைந்தாள்

ழகுநிலாவுடன் காரில் போய்கொண்டே தனக்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்த ஆதித், அதன் பின்பே அழகுநிலாவை திரும்பிப்பார்த்தான் ஆனால் அவள் இன்னும் அழுதுகொண்டு இருப்பதை பார்த்தவன் ஒரு கையால் ட்ரைவ் செய்துகொண்டே மறுகையால் எட்டி அவள் கையை பற்றி அழுகாத அழகி நான் இருக்கேன்ல என்றான்

அதுவரை தன அண்ணன் விட்டுச் சென்றதிலேயே உழன்றுகொண்டு இருந்த அழகி அவனின் தொடுகையில் தன் நிலை அடைந்தவள் அவனின் பிடியில் இருந்து தனது கையை உருவினாள்.

ஏன்? என்ற கேள்வியோடு அவன் முகம் பார்த்த ஆதித்திடம், நீங்க அந்த மாதேஷ் உங்க வருங்காலப் பொண்டாட்டியா நான்? என்று கேட்டதுக்கு எதுக்கு ஆமான்னு.. சொன்னீங்க, நீங்க அப்படி சொன்னதினால தான் என் அண்ணன் என்னை வேண்டாம் என்று விட்டுட்டுப்போயிருச்சு, என்னை சந்தேகப்பட்டு போயிடுச்சு, இந்த உலகத்திலேயே சிறந்த அண்ணன் என் அண்ணன் என்று நான் நினைத்திருந்தேன். என் கண்ணை பார்த்தே நான் வேணும் என்று கேட்காமலேயே என் மனதறிந்து பார்த்து பார்த்து ஒவ்வொன்னா செய்ற என் அண்ணனே இனி நான் அவங்களை ஊர் பக்கம் போய் பார்க்க முயன்றாலே செத்துருவேன்னு சொல்லிருச்சே..... என்றாள்.

அவள் அவ்வாறு கேட்டதும் ஆதித், அவளை ஓர் புருவம் உயர்த்தி கேள்வியுடன் உன் அண்ணன் உன்னை விட்டுப்போனது உனக்கு வருத்தமா? இல்ல நான் உன்னை என் வருங்காலப் பொண்டாட்டியானு அந்த மாதேஷ் கேட்டதுக்கு ஆமான்னு சொன்னது உனக்கு வருத்தமா? இதில் உன் அண்ணன் விட்டுப்போனதற்கு வருத்தம் என்றால் அதற்கு என்ன செய்யலாம் என்று நான் யோசிக்கமுடியும் .ஆனா, இன்னும் ஒரு வாரத்தில் நமக்கு கல்யாணம் நடக்கப்போகிறதே அப்போ நீ என் வருங்காலப் பொண்டாட்டியானு அவன் சொன்னதற்கு எப்படி நான் இல்லைன்னு சொல்லமுடியும் ம்...? என்று கேட்டான் ஆதித்.

அவன் அவ்வாறு கூறியதும் அவன் முகத்தை அதிர்ச்ச்யோடு பார்த்த அழகுநிலா அவன் கேலியாக சொல்கிறானா..! என்று பார்த்தால், ஆனான் அவன் முகத்தில் இருந்த தீவிரம் அவன் சொன்னது கேளியில்லை உண்மைதான் என்று அவளுக்கு காட்டியது. .

எனவே கலக்கத்துடன் வேண்டாம் ஆதித் என்று தலையை குலுக்கியபடி கூறினாள் அழகுநிலா, அனுதாபத்துக்காகவோ உதவி செய்வதற்காகவோ யாரும் கல்யாணம் செய்யகூடாது ,உங்களுக்கு கல்யாணம் என்றால் அவ்வளவு லேசாகப் போய்விட்டதா? அதற்கு நான் ஒத்துக்கொள்ளவேன் என்று எப்படி நீங்க நினைக்கலாம்? நீங்க ரொம்ப நல்லவர்தான் எனக்கு ஒவ்வொருமுறை கஷ்ட்டம் வந்தபோதும் உதவியவர்தான். அதற்காக காலமெல்லாம் உங்க வர்ஷவை உங்களிடம் இருந்து பிரிச்சு அனுதாபம் என்ற பேரில் அந்த இடத்தை நான் எடுத்துக்கொள்ள நினைக்க மாட்டேன். உங்களை கல்யாணம் செய்ய நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். மேலும் அப்படி செய்தால் என் அண்ணன் என் மேல் பட்ட சந்தேகம் உண்மையென்று ஆகிவிடும் என்று படபடவென்று வார்த்தைகளை கொட்டினாள் அழகுநிலா.

அவள் தன்னை கல்யாணம் செய்ய ஒத்துக்கொள்ளமாட்டேன் என்று கூறியதும் கோபத்துடன் உன் அண்ணன் உனக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையை உங்க மனசுல வருங்காலக் கணவனாக நினச்சுட்டீயோ...? அதனால் தான் நான் ஏற்கனவே ஒருத்தியை காதலித்ததை காரணம் காட்டி என்னை கல்யாணம் செய்ய ஒத்துக்கமாட்டேன் என்கிறாயோ? என்று கர்ஜித்தான்

அவன் கோபப்படுவதை பார்த்து, நீங்க புரியாமல் பேசுறீங்க, என் கல்யாணம் பத்தியே நான் இப்போ யோசிக்கல, இதுல வருங்கால புருசன்னு நான் அவனை நினைத்ததாக வேறு சொல்றீங்க... .புருஞ்சுக்கோங்க ஆதித். உங்களுக்கும் எனக்கும் ஒத்துவராது என்று கூறினாள்.

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவளின் ஹாஸ்டலும் வந்துவிட்டது. அதன் முன் நிறுத்தியவன், நீ தப்புதப்பா யோசிக்கற அழகி. என்றவன் நான் உன்னை விரும்பித்தான் கல்யாணம் செய்யநினைகிறேன் என்று அவன் சொல்லி முடித்த மறுநிமிடம்

அனுதாபத்திற்கும் விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாதவள் நான் இல்லை. என்னால் உங்கள் வர்ஷாவின் அளவிற்கு மாடர்னா எல்லாம் உங்களுக்காக என்னால் மாறவும் முடியாது மாறவும் மாட்டேன் என்று கூறினாள் அழகுநிலா.

இபொழுது இருக்கும் அவளின் மனநிலைக்கு தான் அவளை விரும்புகிறேன் என்று சொல்வதை அவளால் ஏற்றுக்கொலவே முடியாது என்று உணர்ந்தவன் இனி இவளிடம் பேசி காரியத்தை சாதிக்கமுடியாது அதிரடிதான் கைகொடுக்கும் என்று முடிவெடுத்தான் ஆதித்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.