(Reading time: 11 - 22 minutes)

அவள் கண்ணை மூடி வேண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த அப்பா பால்கி அவளை அறையின் உள்ளே தனியாக அழைத்துச் சென்றார். உடன் சுனைனாவும் ஒட்டிக் கொண்டார்.

“சொல்லு உத்ரா, வெளியில் நடந்ததை நீயும் கேட்டுக் கொண்டு தானே இருந்தாய், உனது விருப்பத்துக்கு மாறாக அப்பா ஏதும் செய்ய மாட்டேன். உனக்கு முழு சம்மதமா? என தழுதழுத்த குரலுடன் கேட்ட பொழுது அப்பாவை பார்க்கவே வேதனையாக இருந்தது.

எப்படி கம்பீரமாக இருப்பார் அப்பா. அவர் வேதனையை போக்கவாவது தனக்கு அபிமன்யுவை ரொம்ப பிடிக்கும் என சொல்லி விடலாமா என்று இருந்தது உத்ராவிற்கு. ஆனால் அபிமன்யுவின் சம்மதம் அறியாமல் எதுவும் கூற இயலவில்லை.

“அவருக்கு சரி என்றால் எனக்கும் சம்மதம் தான் அப்பா “ என்று மறைமுகமாகக் கூறினாள் உத்ரா.

“என் வயிற்றில் பாலை வார்த்தாய் உத்ரா” என்று  அவளை அனைத்துக் கொண்டார் சுனைனா.

“இப்பொழுது உள்ள சூழ்நிலைக்காக ஒத்துக் கொள்ள வேண்டாம் உத்ரா. உனக்கு மனசுக்கு சரி என்று பட்டால் மட்டும் சொல்லு. அபிமன்யுவும் வெளி ஆள் இல்லை. உனக்கு நன்கு அறிமுகமானவன் தான். இதில் எந்த நிர்பந்தமும் இல்லை. நல்லா யோசிச்சு சொல்லுடா” என கூறி உத்ரா தலையை ஆதரவாக கோதி விட்டார் பால்கி.

“எனக்கு அபியை பற்றி தெரியும் அப்பா, வேண்டாம் என்று சொல்ல ஒரு காரணமும் இல்லை. அதனால் எனக்கு சரி என்று தான் தோன்றுகிறது.” என்று அடக்கமான பெண்ணாக அப்பா முன் சொல்லும் பொழுதே மனதிற்குள் குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தாள் உத்ரா.

அதை கேட்ட பின்பே அப்பாவின் முகத்தில் ஒரு புன்னகை உதயமானது. அவர் சென்று விக்ரமிடம் சம்மதத்தை கூற அடுத்து விக்ரம் சென்று அபிமன்யுவிடம் பேச தயாரானார். அந்த அறையில் அவர் நுழைந்த பொழுது மடி கணினியில் எதோ வேலையாக இருந்தான். அவரை பார்த்ததும்,

“வீட்டிற்க்கு கிளம்பலாமா அப்பா?” என கேட்ட படி எழுந்தான்.

“அதை பற்றி தான் உன்னிடம் பேசலாம் என்று வந்தேன் அபி”

“பரவாயில்லை அப்பா, த்ரிஷா அக்கா எல்லாம் என்னிடம் சொன்னார்கள்.”

“அதற்கு பின்பு நாங்கள் முடிவெடுத்ததை தான் உன்னிடம் பேச வந்தேன் அபி. உனக்கு உத்ராவை தெரியும் இல்லையா. இந்த முகூர்த்தத்திலேயே உனக்கும் உத்ராவிர்க்கும் திருமணத்தை நடத்தி விடலாம் என நினைக்கிறேன். நீ என்னப்பா சொல்ற.” என கேட்டார் விக்ரம்.

சிறிது யோசித்த அபிமன்யு “நான் உத்ராவிடம் தனியாக பேச வேண்டும் அப்பா. அதற்கு ஏற்ப்பாடு செய்யுங்கள் முதலில்.” என கூறினான்.

“கண்டிப்பா செய்யறேன் அபி” என கூறியவாறு அங்கிருந்து கிளம்பி பால்கியிடம் பேசி, அவர்கள் இருவரும் பேச ஏற்பாடு செய்தார் விக்ரம்.

னி அறையில் உத்ரா இருந்த பொழுது, அந்த அறையில் நுழைந்தான் அபிமன்யு. பெரிதாக எந்த முகாந்திரமும் இல்லாமல் நேரடியாக “ உனக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதாமா? என கேட்டான்.

மீண்ட சொர்கமாக தெரிந்த வாழ்க்கை கசக்குமா என்ன? ஆனால் உத்ராவிற்கு பேச்சு தான் வர வில்லை. தலையை மட்டும் ஆட்டி தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

 நீ யாரையாவது விரும்புகிறாயா? என்று அவள் கண்களைப் பார்த்து அபிமன்யு கேட்ட பொழுது, உத்ராவின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தி, பின் அதி வேகத்தில் துடித்தது. அதன் சத்தம் உத்ராவின் காதுகளுக்கே கேட்கும் வண்ணம்.

என்ன சொல்வது? ஆம் என்றா இல்லை என்றா? ஆனால் அவன் கண்களை பார்த்த பொழுது பொய் சொல்ல தோன்றவில்லை. ஆம் என்றே தலை ஆட்டினாள்.

ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்த அபிமன்யு, “ சரி அப்பாவிடம் சென்று எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி விடுகிறேன்.” என கூறி கதவை நோக்கி நகர்ந்தான்.

திருமணம் நடந்ததா , நின்றதா பார்ப்போம் அடுத்த அத்யாயத்தில்.

தொடரும்... 

Episode # 02

{kunena_discuss:1170}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.