(Reading time: 21 - 41 minutes)

அங்கே போய் அங்கு இருக்கிற என் அழகுநிலாவை இங்க கூட்டிக்கொண்டு வாங்க, அம்மா முழிக்கும் போது அவளை பார்த்தா கொஞ்சம் தெம்பாவாங்க என்றான்.

ஏற்கனவே காலை பிரச்சனையின் போது அங்கே ஒரு பெண்ணை தங்க வைத்திருப்பதாக சொல்லியதால்தான் தங்கச்சிஜானகியின் நிலைமை இப்படி ஆனது இந்த நிலையில் அந்த பெண்ணை நீங்க இங்கேயே கூட்டிக்கொண்டு வரச்சொல்கிறீரீர்களே சின்னையா! என்று யோசனையுடன் கேட்டார் முருகன்

அவளைத்தான் என் அம்மா அவங்க வருங்கால மருமகளா எப்பவோ... நினைகத் தொடங்கிட்டாங்க. இப்போ அவ இங்க வந்து அவங்க அத்தையை பார்க்கணும் என்று பிடிவாதமா சொல்லிட்டா. அவ இப்போ கொஞ்சம் பாதுக்கப்பாக இருக்கவேண்டிய கட்டாயம் அதனால்தான் வேற யாரையும் அவளை கூப்பிட்டுக்கொண்டு வரச் சொல்ல என்னால் முடியவில்லை என்று ஆதித் கூறினான்

ஆதித் அவ்வளவு சொன்னப்பிறகு முருகன் அங்கேயா இருப்பார்…. இதோ தூசு துரும்பு கூட அம்மணி மேல படாம பத்திரமா கூட்டிட்டு வந்துடுறேன் என்றவன் காரை ஓ எம் ஆர் ரோட்டிற்கு விரட்டினார்.

அழகுநிலா அங்கிருந்தபடி தெய்வங்களை எல்லாம் வேண்டியபடி ஆதித் அனுப்புவதாக சொன்ன காருக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் அவளுக்கு மற்ற கவலைகள் அனைத்தும் மனதில் பின்னுக்கு சென்று ஆதித்தின் கலக்கமும் ஜானகியின் உடல் நிலைபற்றிய கவலையுமே முழுவதுமாக அவளை ஆக்ரமித்திருந்தது

முருகன் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ஆதித், பின் அவனை நினைத்து அவனே நானா.... நானா? அவளிடம் கலங்கிப்போய் பேசினேன். அவளிடம் போனில் பேசும்போது தனது கன்னத்தில் வடிந்த கண்ணீரை தன கைகளில் துடைக்கும் போது அழுவதை உணர்ந்து, பின் தன்னை மறுபடியும் விறைப்பாகி பேசி பேச்சை முடித்ததை நினைத்துப்பார்த்தான்.

பின் தனக்குள்ளேயே தன அன்னையின் நிலை தன்னை வலிமை இழக்கச் செய்திருப்பதை உணர்ந்தான். ஆனால் மறுநிமிடமே எந்த சூழலிலும் உறுதியாக இருக்கவேண்டும் என முடிவெடுத்தான். மேலும் தான் தன வாழ்க்கையை தன கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினைத்தது அழ்குநிலாவை பார்த்ததும் மாறிவிட்டதை உணர்ந்தான்.

அவள் தன்னை அவளை நோக்கி அவள் அறியாமலே இழுக்கிறாள் நானும் அவளிடம் மட்டும் என் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறேன் இனி அப்படி நடக்க விடக்கூடாது என முடிவெடுத்தான். ஆனால்! அம்முடிவு அவளை பார்த்ததும் உடைந்துவிடும் என்பதை அவன் இன்னும் உணரவில்லை .

அன்று காலையில் டாக்டர் வந்து அவனின் அம்மாவின் நிலைமை கவலைக்கிடம் என்று சொன்னதும் அங்கிருந்த வேலாயுதத்திற்கு பிரசர் அதிகரித்து வேர்த்து ஊற்றி படப்படப்பாக வந்தது. அதனை ஆதித்துடன் பேசிக்கொண்டிருந்த டாக்டர் கவனித்து வேலாயுதத்தையும் பக்கத்து அறையில் இருந்த பெட்டில் அவர் மனம் அமைதியடைவதற்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வைத்திருந்தார் .

ஆதித் வேலாயுதம் இருந்த அறையை அவர் தூங்குகிறாரா? என்று எட்டிப்பார்த்த ஆதித்தை கை அசைத்து கூப்பிட்டார் என்னப்பா என்று அவரின் அருகில் போன ஆதித்திடம் ஜானகி முழித்துபார்த்தாளா.... என்று கேட்டார், அவனால் சகஜமாக அவரிடம் பேச வரவில்லை இருந்தாலும் இல்லப்பா என்று ஒருவார்த்தையில் பதில் சொன்னதும் சரி ஆதித் நீ போய் அவளின் ரூமின் அருகில் இரு. அவள் எழுந்ததும் என்னை கூப்பிடு என்றவர் சோர்வுடன் கண்ணை மூடினார்.

வெளியில் வந்த ஆதித்துக்கு உலகமே இருண்டது போல் இருந்தது அவனை அறியாமல் ஆதரவுக்காக மனம் அலை பாய்ந்தது அப்பொழுது அழகுநிலாவின் உருவம் அவன் கண்முன் நிழலாடுவதுபோல் தோன்றவும் அவளின் கரத்தை ஆதரவுக்காக பிடிக்க எழுந்து நடந்தான்

அது நிழல் அல்ல அழகுநிலா நிஜமாகவே வந்துவிட்டாள் என்பது அவளும் அவனை நோக்கிவரவர அவன் தெரிந்துகொண்டான்

அப்பொழுது ஜானகி இருந்த ஐ சி யூ வார்டில் இருந்த நர்ஸ் வெளியில் வந்து பேசன்ட் முழிச்சுட்டாங்க ஆதித் , உங்ககூட பேசணும் என்று சொல்றாங்க என்றதும், அவனின் அருகில் வந்த அழகுநிலவின் கையை பிடித்துக்கொண்டான் ஆதித்.

அவனின் மனதின் நடுக்கம் அழகுநிலாவின் கை பற்றும் போது கொஞ்சம் குறைவதுபோல் இருந்தது அவளின் கை பிடித்தவாறே நீயும் உள்ள வா அழகி நீ இங்க வந்ததுமே அம்மா முழிச்சுட்டாங்க பாரு! என்றபடி ஜானகி இருந்த அறைக்குள் நுழைந்தனர் .

ஆதித்தையும் அழகுநிலாவையும் ஒன்றாக பார்த்த ஜானகியின் முகம் மலர்ந்தது இருவரும் அருகில் போனதும் ஆதித் அம்மா என்றபடி அவளின் கையை பிடித்துக்கொண்டான். அழகுநிலா சரியா போயிடும் ஆண்ட்டி உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்றாள்

அவள் கூறியதைக்கேட்ட ஜானகி இனி நான் நல்லபடி எழுந்துக்க முடியாது. ஆனா நான் கண் மூடுறதுக்குள்ள உங்க இரண்டுபேர் கல்யாணத்தையும் நடத்தி முடிக்கணும் என்று கூறினார்

அவர் அவ்வாறு கூறவும் அழகுநிலா அதிர்ச்சியாகி நின்றாள். ஆதித் ஆற்றாமையுடன் அப்படியெல்லாம் சொல்லதீங்க அம்மா எனக்கு உங்களைவிட்டா யாரிருக்கா என்னை விட்டுடுட்டு உங்களை போக விடமாட்டேன் என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.