(Reading time: 21 - 41 minutes)

அப்பொழுது வேகமாக உள்ளே வந்த வேலாயுதம் ஜானகி அழகுநிலாவின் கையை பிடித்து கண்களிலும் முகத்திலும் சிரிப்புடன் இருப்பதை பார்த்தவருக்கு அழகுநிலா அருகில் இருந்தால் தன மனைவி பிளைத்துவிடுவாள் என்ற எண்ணம் உண்டானது.

வந்தவர் உனக்கு ஒன்றும் ஆகாது ஜானகி.... நீ இல்லாமல் என்னாலும் இருக்க முடியாது ஜானகி. எங்களுக்ககவாவது நீ எழுந்து வாமா என்று குரல் கரகரக்க அவளிடம் பேசினார்

அவர் பேசப்பேச ஜானகியின் கண்ணில் கண்ணீர் வழிந்தது. வர வழைத்துகொண்ட சிரிப்பில் ஆதித்துக்கு கல்யாணம் முடியும் வரை என் உயிர் என்னை விட்டு பிரியாதுங்க என்றவர், இன்னும் மூன்று நாட்களுக்குள் இரண்டு பேருக்கும் கல்யாணம் முடிக்கவேண்டும் அதுவரை என் மூச்சை இழுத்து பிடித்து வைக்க என்னென்ன செய்யம்முடியுமோ அத்தனையும் செய்யுங்க என்றார்.

உடனே நர்ஸ் போதும் அவங்க ரொம்ப நேரம் பேசிட்டாங்க... எல்லோரும் வெளியபோங்க என்று சொன்னாள், உடனே ஜானகி ஒருநிமிஷம் என்று கஷ்ட்டப்பட்டு கூறியவள் நீங்க இப்போ அழகுநிலாவின் வீட்டிற்கு போய் சம்பந்தம் பேசுங்க என் நிலையை சொல்லி உடனே கல்யானத்தை முடிங்க, என் பிள்ளையை நான் கல்யாணக் கோலத்தில் பார்க்கணும் என்றவர் அதற்கு மேல் பேசமுடியாமல் கண் மூடினார்

நர்ஸ் அவளுக்கு மூச்சு சீராக வர தேவையான மருந்துகளை ஏற்ற விரைந்தாள் மற்றவர்கள் இனி அங்கிருக்க முடியாமல் வெளியில் வந்தனர்.

வெளியில் வந்ததும் ஒருநிமிடம்தான் வேலாயுதம் தொய்ந்துபோய் உட்கார்ந்தார். மறுநிமிடமே அழகுநிலா ஆதித் இருவரையும் அருகில் அழைத்து என் ஜானகி என்கிட்டே கேட்டமாதிரி இன்னும் மூன்றுநாளில் உங்க கல்யாணத்தை நடத்தனும் என்றவர், அழகுநிலாவிடம உங்க வீட்டில் எப்படிமா இந்த கல்யாணத்திற்கு சம்மதிப்பார்களா? என்றதும் அவளுக்கு கண்ணை கரித்தது கண்களில் நீர் கோர்த்து வார்த்தை வெளிவராமல் தவித்தது.

ஆதித்தான் அவளின் நிலை உணர்ந்து அழகி நீ கவலைப்படாத எல்லாம் சரியாகிடும் என்றவன், வேலாயுதத்திடம் முதன்முதலில் அவளை பார்த்தில் இருந்து அதன் பின் அழகுநிலாவிற்கு நடந்த பிரச்சனை அதில் எவ்வாறு தான் அவளுக்கு உதவினேன் என்றும் கடைசியில் அவளின் அண்ணன் வந்தது அப்பொழுது மாதேசிடம் நான் கூறிய என் வருங்காலப் பொண்டாட்டி அழகுநிலா என்று கூறியதை அவளின் அண்ணன் கேட்டு அழகுநிலாவை அவனுடன் சந்தேகப்பட்டு அவளை விட்டுவிட்டுப்போனதுவரை எல்லாம் கூறினான்

அவன் கூறி முடித்ததும் வேலாயுதம் வருத்தத்துடன், கடைசியில் மாதேஷ் தான் இந்த பொண்ணோட வாழ்க்கையிலும் விளையாடியிருகிறானா? நல்லவேளை என் ஒருமகன் செய்த தவறை இன்னொரு மகனான நீ சரிசெய்து பெரும் பாவத்தில் இருந்து நம் குடும்பத்தை காப்பாத்தியிருக்க என்றவர், யோசனையுடன் அப்போ நீங்க ஒருத்தர ஒருத்தர் விரும்பலையா? என்று கேட்ட மறுநிமிடம் அப்பா எனக்கு கல்யாணம் என்ற ஒன்று நடந்தால் அது அழகுநிலாவுடன்தான் என்று வேறு எதுவும் அவர் கேள்வி கேட்காதவாறு கூறி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஆதித்

அழகுநிலாவிற்கு வேலாயுதம் கூறிய என் ஒரு மகன் செய்த தவறை இன்னொரு மகன் நீ சரிபண்ணிட்ட என்று கூறிய வார்த்தை நெருடலாக இருந்தது ஆனால் அவள் அதனை பற்றி யோசித்து கேட்க்க முடியாமல் வேலாயுதம் அவளிடம் சரிமா எப்படியாவது உன் வீtட்டில் போய் பேசி அவங்களை சமதிக்கவைத்து இந்த கல்யாணத்தை உடனே நடத்தனும். ஆதித்! நீ இப்போ இங்க ஹாஸ்பிடலில் கிட்ட இருந்த ஜானகியை பார்த்துக்கோ என்று சொன்னவரின் குரல் கரகரத்தது. ஆனால் அவர் கடமையை எண்ணி ஜானகியை விட்டு குட்லாம் பட்டிக்கு புறப்பட முருகா என்று ட்ரைவரை கூப்பிட்டார்.

அதுவரை அவர்கள் பக்கத்தில் நின்றாலும் அவர்கள் மும்மரமாக பேசுவதால் இடையில் பேசமுடியாமல் நின்ற முருகன் இப்போ தங்கச்சி எப்படி இருக்காங்க ஐயா என்று கேட்டதும் வேலாயுதம் அவ நம்மல விட்டு போகணும்னு முடிவெடுத்துட்டா முருகா.. கடைசிவரை அவ என்னை மனசார ஏத்துகிட்டதை என்னிடம் சொல்லாமலே இப்போ என்னை விட்டு போகணும் என்று முடிவெடுத்துட்டா... என்றவர் குரல் துக்கத்தில் கரகரத்தது என் ஜானகி ஆதித்தை கல்யாணக் கோலத்தில் பார்க்கணும்னு சொல்றா. சம்மந்தம் பேசபோகனும். குட்லாடம்பட்டி ஆண்டிபட்டி தொகுதியில் இருக்குனு நினைக்கிறேன் ஆண்டிப்பட்டி எம் எல் ஏ நம்ம தவசி தானே என்று கேட்டார்.ஆமாங்க ஐயா என்றதும் தனது மொபைலை எடுத்து எம் எல் ஏ தவசிக்கு போன் போட்டார் வேலாயுதம் .

அவர் எடுத்ததும், நான் தான் தவசி உன் மூலமா ஒரு காரியம் ஆகணுமே என்றவர், என் ஜானகிக்கு கொஞ்சம் கிரிடிகளான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கேன் அவ ஆதித்தோட கல்யாணத்தை உடனே பார்க்கணும் என்று நினைக்கிறாள். என் மகன் ஆதித்துக்கு உன் தொகிதியில் இருக்கிற குட்லாடம்பட்டி என்ற ஊரு பெண்ணுடன் இன்னும் இரண்டுநாளைக்குள் கல்யாணத்துக்கு பேசி முடிக்கணும் ஆனா அந்த பொண்ணோட அண்ணன் ஆதித்தும் அவன் தங்கையும் விரும்புறது தெரிஞ்சதும் தங்கச்சிகிட்ட கோவிச்சுட்டு ஊருக்கு வரக்கூடாது என்று சொல்லிட்டு போய்ட்டான்.

நீ என்ன செய்ற அந்த ஊருபெரிய ஆள பிடிச்சு நம்ம செல்வாக்கை சொல்லி இப்போ ஜானகியோட நிலைமையை கூறி நாளைக்கே கல்யாணத்தை அவங்க வீட்டு சம்மதத்தோட செய்றமாதிரி பேசி வச்சுரு நானும் கிளம்பி இன்னைக்கு நைட்டு அங்க வந்துடுறேன் நாளைக்கு பிளைட்டில் அவங்களை கூட்டிட்டு சென்னை வந்து கல்யாணத்தை கிட்ட இருந்து நீ முடிச்சு குடுத்துடு என்றவர் தொடர்பை துண்டித்து நான் கிளம்புறேன் அதற்குமுன்ன ஜானகியை ஒருதடவை பார்த்துட்டு வந்துடுறேன் எப்றவர் ஐசியூ அறைக்குள் அனுமதிபெற்று உள்ளே சென்றார் ஆனால் அங்கே ஜானகி மருந்தின் உதவியில் உறங்கிகொண்டிருந்தார் அவளை தொந்தரவு கொடுக்காமல் வெளியேறியவர். கனத்த இதயத்துடன் அழகுநிலா வீட்டிற்கு புறப்பட்டார்.

----தொடரும்----

Episode 16

Episode 18

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.