(Reading time: 10 - 20 minutes)

“ஹேய் அதெல்லாம் இல்ல சங்கு.. அவன் உன் மேல வந்த லவ் எதிர்பாராமல் வந்ததுனு சொல்றான்.. அதை மறக்க முயற்சியும் பண்றேன்னு சொன்னான்..”

“அப்பாடா.. நான் தப்பிச்சேன்..”

“அவனுக்கு உன் நட்பு மட்டும்தான் வேணும்னு சொல்றான்..”

“அது எதுக்கு..”

“அவன் லவ்வா கேட்கறான்.. friendship தானே கேட்கிறான்..”

“இது சரி இல்லை அம்மு... மறக்கணும்னு முயற்சி பண்றவன் நட்பை கேட்கமாட்டான்.. அவனை நான் நம்ப மாட்டேன்.”

“ஏன் இப்படி சொல்ற.. அவன் நல்ல பையன் பா..”

“நீ கண்ட... போவியா.. பெருசா எல்லாம் தெரிந்தவமாதிரி.. இங்க பாரு அம்மு அவனை பத்தி நீ பேசுனா நமக்குள்ள சண்ட தான் வரும் விடு.. வா.. கிளாஸ்க்கு டைம் ஆச்சு..” என்று அம்முவை இழுத்து சென்றாள்...

இப்படியே 2 நாட்கள் சென்றது... அப்போதுதான் விக்ரம் அம்முவின் மீது கோபப்பட்டான்..

மித்ரா மிகவும் தைரியசாலி.. ஒரு விஷயத்தை தவிர.. அவளுக்கு நீச்சல் தெரியாது.. அதற்கு காரணம் அவளுக்கு தண்ணீர் கண்டு பயம்.. இது தெரிந்த அம்மு-மித்ராவின் தோழி ஒருத்தி, அம்மு மித்ராவுக்கு நீச்சல் கற்றுத்தர சவால் விட, அம்முவும் அதை ஒப்பு கொண்டாள்.. ஆனால் மித்ராவோ அதற்கு ஒற்றுக்கொள்ளவே இல்லை..

ஆனால் அம்மு மித்ராவை வற்புறுத்தி சம்மதிக்க வைக்க, அடுத்தநாளே வீட்டிலே இருக்கும் நீச்சல்குளத்திற்கு மித்ராவை அழைத்து சென்றாள் அம்மு..

மித்ரா எவ்வளவோ சொல்லியும் கேட்காத அம்மு அவளை தகுந்த பாதுகாப்புடன் தண்ணீரில் தள்ளிவிட மித்ராவோ தத்தளித்தாள்... அவள் அழும் சத்தத்தை கேட்டு அங்கு வந்த விக்ரம் மித்ரா தண்ணீரில் இருப்பதை கண்டு அவளை அங்கிருந்து வெளியே எடுத்து செல்ல, அவள் மயக்கமடைந்து விட்டாள் பயத்தில்...

டாக்டர் அவளை கவனித்து ஒன்றுமில்லையென்றும் பயத்தில் மயங்கி விட்டதாக சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து சென்றதும், அம்முவின் கன்னத்தில் இடியாய் இறங்கியது அவன் கொடுத்த அறை..

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.. அவளுக்கு தண்ணீர் கண்டா பயம்னு உனக்கு தெரிந்தும் அவளை எதுக்கு இறக்கிவிட்ட..” என கோபமாய் கர்ஜித்தான்..

அம்முவால் எழவே முடியவில்லை.. அவன் அடித்ததும் சுருண்டு விழுந்தவள் தான்..

விக்ரம் அவளை பிடித்து நிறுத்தினான்.. “நான் கேட்கறேன் பதில் சொல்லுடி.. அவள் அங்கே பயந்து கத்துறா.. நீ பாத்துட்டே இருக்க.. ஏன்டீ இப்படி பண்ற.. அவளை உன் உயிர்த்தோழின்னு சொல்லிக்கிற.. ஆனா உன்னால அவள் எவ்ளோ கஷ்டபடுகிறானு தெரியலையா.. அன்னைக்கு அப்படிதான் உன்னால accident ஆகி அவ கை உடைந்தது.. இப்போ இதுமாதிரி எப்படி நீ எதுக்காக நீ அவளை காயப்படுத்துற..” என்றவன் ச்சே.. என்று அவ்விடத்தை விட்டு அகன்றான்..

அம்மு அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.. அவன் கையால் அடிக்கும்போது மகிழ்ச்சியடைந்த மனம், அவன் பேசியதை கேட்டு மனம் வருந்தினாள்.. ஆனால் அடுத்தநாளே அவன் அவளிடம் சொல்லாமல் மும்பை சென்றதுதான் அவளுக்கு தாங்க முடியாத வலியாய் அமைந்தது.. அவனிடம் பேச முயற்சித்தால் அவன் போன் எடுக்கவே இல்லை.. இவையெல்லாம் மித்ராவிடம் கூறி புலம்ப, அவளும் அண்ணனிடம் தான் பேசி புரியவைக்க முயற்சித்தால் அவன் அதை கேட்கவே இல்லை.. இப்படியே ஒரு வாரம் கடந்தது..

பரத் அம்முவிடம் தன் நட்பை வளர்த்தான்.. அதன் பயனாய் மித்ராவின் அருகாமை கிடைத்தது.. அம்முவும் மித்ராவும் எப்போதும் ஒன்றாய் தான் இருப்பார்கள்.. அதனால் மிக கவனமாக தன்னை நல்லவன் போல் காட்டிக்கொண்டான்.. அதனால் மித்ராவிடம் அவன் பேச முயற்சிக்கவில்லை.. மித்ராவும் அவனை கவனிக்கத்தான் செய்தாள், ஆனாலும் அவனை நம்ப அவள் மனம் விரும்பவில்லை..

ஒருவாரத்திற்கு பின் மித்ரா விக்ரமை ஒரு வழியாய் சமாதானப்படுத்தி  அன்று நடந்ததை கூற, அவனுக்கு கஷ்டமாய் போய் விட்டது.. பின் நேராக சென்னை வந்து அம்முவை சமாதானப்படுத்திவிட்டு ஒருநாளிலே மும்பை திரும்பி விட்டான்..

நாட்கள் செல்ல செல்ல அம்மு-மித்ரா-பரத் நட்பு பலப்பட்டது.. ஆனால் மித்ரா முழுமையாய் பரத்தை நம்பமுடியாமல் ஒதுங்கியே இருந்தாள்.. எக்ஸாம் வரவும் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்தினர்.. இதன் விளைவாக படிப்பில் சுமாரான பரத் குரூப் ஸ்டடி செய்ய விக்ரமின் பங்களாவுக்குள் நுழைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டான்..

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.