“ஏய்! வா ஸ்டெல்லா. நல்லாயிருக்கியா? வீட்டில் எல்லாரும் நல்லாயிருக்காங்களா?”
“நல்லாயிருக்கோம்டி.”
சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
“ஏய்! தீபிகா என்கிட்டே பேசினா.”
“அப்படியா?”
“முதல்ல உனக்குதான் அழைச்சிருக்கா. நீ எடுக்கலைன்ன உடனே எனக்கு போன் பண்ணினா. நீ சுருதி வீட்டுக்குப் போயிருக்கேன்னு சொன்னேன்.”
“அப்புறம் என்ன சொன்னா? எப்படி இருக்காளாம்?”
“தொழில் நன்றாகப் போயிக்கிட்டிருக்காம். அவளோட அம்மாவும் பேசினாங்க. ரொம்ப சந்தோசப்பட்டாங்க. அப்புறம்..”
“அப்புறம் என்னாச்சுடி?”
“அவளோட கணவன் அவளை அழைக்க வந்தாராம். இவ யோசிக்கனும்னு சொல்லி அனுப்பிட்டாளாம். ஏன்னு நான் கேட்டதுக்கு இந்த வாழ்க்கையே பிடிச்சிருக்கு. என்னை ஒரு மனுசியாகவே மதிக்காதவங்க வீட்டில் மறுபடியும
...
This story is now available on Chillzee KiMo.
...
னிடம் சொல்ல அவன் தனது நண்பனிடம் எடுத்துச்சொல்லி ஒத்துக்கொள்ளச் சொல்லியிருந்தான்.
இருவரும் தனித்துப்பேசும்போது அவனது தந்தையைத் தான் நன்றாகப் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தாள் ஸ்டெல்லா. அவனும் அவளது வீட்டிற்கு தலைமகனாய் இருந்து அவளின் தாய் தங்கைகளையும் பார்த்துக்கொள்வதாக உறுதி கூறினான்.