(Reading time: 16 - 31 minutes)

ருணா படப்படப்போடு கட்டிலில் அமர்ந்திருந்தாள். வருணாவை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வந்து கட்டிலில் உட்கார வைத்தப்பபின், செண்பகமும் விக்னேஷும் வீட்டிற்கு கிளம்பினார்கள். அவர்களை கீழே வரை இறங்கி வந்து ஆதவன் வழி அனுப்பி வைத்தான். அவனது வரவை எதிர்பார்த்தப்படி அவள் அமர்ந்திருக்க, கதவை திறக்கும் சத்தமே அவன் வருகையை உணர்ர்தியது. அது தெரிந்தும் அவள் தலையை நிமிர்த்தவே இல்லை.

இவர்கள் இருவருக்கும் திருமணம் என முடிவாகி, கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து தான் திருமணம் நடந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் வருணாவும் ஆதவனும் பேசிக் கொண்டதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பொன்னம்மா பாட்டி இருக்கும் போதாவது அவன் வீட்டிற்கு வரும் சமயங்களில் சில வார்த்தைகள் பேசியிருக்கிற

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் குடிச்சிட்டு தான் உனக்கு வாங்கிட்டு வந்தேன்..” என்றவன், மீண்டும் தண்ணீர் குழாய்க்கு செல்ல, அவளும் டீ குடித்து முடித்ததும், இப்போது எடுத்து வந்த தண்ணீர் குளிப்பதற்கு ஏற்ப இருக்கவே, சுடு தண்ணீர் இல்லாமலேயே குளித்து முடித்து வந்தாள். பின் நேராக சாமிப்படத்தின் முன்னே சென்று விளக்கேற்றினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.