அதேபோல் தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்கும் கூட அவளுக்கு கொஞ்சம் பயம் தான், இவர்கள் கட்டிடத்திற்கு கொஞ்சம் தள்ளி தான் தெருக்குழாய் உள்ளது.. அதில் தினசரி சண்டை இல்லாமல் அமைதியாக தண்ணீர் பிடிப்பதே அரிது தான்.. ஏதாவது இருப் பெண்களிடையே சண்டை வந்துவிடும்.. சில சமயம் அவர்களுக்கு துணையாக அவர்களின் கணவன்மார்களும் கூட சண்டைக்கு வந்துவிடுவர். அதுவும் அசிங்கமான வார்த்தைகளால் இருவரும் சண்டையிட்டு கொள்வார்கள். அவளே சிலசமயங்களில் அந்த சண்டைகளை நின்று வேடிக்கை கூட பார்த்திருக்கிறாள்.
அந்த குழாயடியில் ஆதவன் எப்படி தான் நின்று தண்ணீர் பிடிக்கின்றானோ? என்று நினைத்துக் கொள்வாள். சில சமயங்களில் காலையில் குழாயில் தண்ணீர் வராது.. அதனால் ஆதவன் கிளம்பிவிடுவான். ஒருநாள் தண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே தான்.. வாடகையெல்லாம் கரெக்டா பேசிட்டீங்கன்னா, அட்வான்ஸ் கொடுத்துடலாம்.”
“நான் முன்னயே எல்லாம் பேசிட்டேன், உனக்கு இடம் பிடிச்சிருந்தா அட்வான்ஸ் கொடுக்கறதா நேத்தே சொல்லிட்டு வந்துட்டேன்.. அதனால பிரச்சனையில்லை..” என்று, அந்த இடத்துக்குரியவர்களை பார்த்து அவர்களுக்கு முன்பணம் கொடுத்தனர்.