“பக்கத்துல தான் நம்ம வொர்க்ஷாப் இருக்கு.. பசங்கக்கிட்ட வேலையை ஒப்படைச்சிட்டு வந்துருக்கேன்.. அவனுங்களும் உன்னைப் பார்க்கனும்னு சொல்றானுங்க.. ஒருப்பார்வை பார்த்துட்டு போலாமா?” அவளிடம் அவன் அனுமதி கேக்க, அவளும் ஒத்துக் கொண்டாள். இப்படி அவனோடு பைக்கில் வலம் வருவது அவளுக்கு தான் பிடித்திருக்கிறதே!
வொர்க் ஷாப்பிற்கு போனதும், முருகனும் அவனது வயதை ஒத்த சுகுமாரும் அவர்களை வரவேற்றனர். சுகுமார் இப்போது தான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தான். முன்பானால் ஆதவன், நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வான், இரவு தாமதமாக கூட வீட்டிற்கு செல்வான். பொன்னம்மாவிற்கு அதுவரை தனியாக இருக்க பிரச்சனை இல்லை. ஆனால் வருணா வந்ததிலிருந்து அப்படி இல்லையே, விரைவில் வீடு திரும்ப வேண்டும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
பற்றி தெரியாது. செண்பகத்தை பார்க்க வீட்டிற்கு போகும்போதெல்லாம் அவள் அறைக்குள்ளே தானே இருப்பாள். அவள் மற்றவர்களோடு எப்படி பழகுகிறாள் என்பது தான் அவனுக்கு தெரியாதே! இப்போது இந்த இருவரிடமும் பேசுவதை பார்க்கும்போது, அவளை இப்படி வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்ததில் அவனுக்கு குற்ற உணர்வு அதிகமானது.