(Reading time: 14 - 27 minutes)

மணமக்கள் பெரியவர்களிடம் ஆசிபெற வர,லஷ்மியும் கண்ணணும் தங்களோடு சேர்த்துக் கொண்டனர்..ஹரிணி தன் பெற்றோர் அருகில் வர ரகுவோ ஒருவித தடுமாற்றத்தோடு அவர்கள் அருகில் வந்தான்..பெரியவர்கள் என்ற மரியாதைக்கு அவள் பெற்றோர் காலில் விழுந்து அவன் ஆசி பெற மதுராவோ கண்கலங்கி விட்டார்..

“ஆன்ட்டி ஹணி இனிமே என் பொறுப்பு தைரியமா இருங்க..”,என இகுவாய் கூற முடிந்தவனால் ஏனோ கிருஷ்ணணிடம் ஒரு வார்த்தைகூட பேசமுடியவில்லை..அவருக்குமே ஏதோ ஒருதடை இருந்து கொண்டுதான் இருந்தது..அதன்பின்  ஹர்ஷாவின் அருகில் வந்தவள் அவன் தோள் சாய்ந்து அழுது தீர்த்துவிட ஹர்ஷாவிற்கே கண்கலங்கி விட்டிருந்தது..

“ஹரிணிம்மா என்னதிது சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு??சந்தோஷமா இருப்ப டா” என தலை வருடி தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தினான்..

தேங்க் யூ சோ மச் ஹர்ஷா என ரகு அவனை கட்டிக் கொண்டான்.. அதன்பின் அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து மாலை வேளையில் மணமக்கள் ரகுவின் வீட்டை அடைந்தனர்..அஞ்சலி மட்டுமாய் அவளோடு தங்கியிருக்க மற்றவர்களை பிரியும் நேரம் ஹரிணிக்கு முதன் முறையாய் தந்தையை கட்டியணைத்து அழத் தோன்றியது..

“உடம்பை பாத்துக்கோங்கப்பா..”

“என்ன ஹரிணிம்மா..ஏன் அழற இதோ இருக்கேன் அப்பா நினைச்சா வந்து பாத்துட்டு போக போறேன்..சந்தோஷமா இரு..”,என தலை வருடி திரும்பியவரின் கண்களுமே சிவந்து விட்டிருக்க ரகுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது..அத்தனை கம்பீரமாய் இருந்தவர் கண்ணில் நீரை அவனால் நம்பவே முடியவில்லை..ஏதோ ஓர் உந்துதலில் ஹரிணி அருகில் வந்தவன் அவள் தோள்பற்றி அணைத்து அவரை பார்த்து,

“ஹரிணியை நினைச்சு கவலபடாதீங்க அவ இனி சந்தோஷமா மட்டும்தான் இருப்பா “,என ஆதரவாய் கூற முதன் முறையாய் அவன் முகம் நோக்கியவர் விடைபெறும் மொழியில் தலையசைத்துச் சென்றார்..

வீட்டின் கூட்டம் வெகுவாய் குறைந்திருக்க ஹரிணி கீழிருந்த அறையில் ஒய்வெடுக்க ரகு ஹாலில் ஆண்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..இரவு உணவு வேளையின் போதுதான் அவன் அவளை பார்க்க முடிந்தது..அவனருகில் அமர்ந்து அவள் உணவு உண்ண பிறரறியாமல் அவள் காலை லேசாய் தன் விரலால் வருட அவளோ கூச்சத்தில் நெளிந்தாள்..

அவளின் முகச் சிவப்பே அவனை இன்னும் அவள்புறம் ஈர்த்தது..ஒன்றும் அறியாதவனாய் சாப்பிட்டு முடித்து கை கழுவச் சென்றவனை அண்ணன் முறையிலிருந்தவர் மாடிக்கு அழைக்க அவன் சென்றுவிட்டான்..

இங்கு அஞ்சலி ஹரிணியிடம் புடவையை கொடுத்து மாற்றச் சொல்லி மெல்லிதாய் அவளை அலங்கரிக்க லஷ்மி கையில் பூவோடு உள்ளே வந்தார்..

என் கண்ணே பட்டுரும் ஹரிணி…என திருஷ்டி கழித்தவர் பூவை அஞ்சலியிடம் கொடுத்துவிட்டு சென்று கையில் பால் சொம்போடு வந்தார்..அஞ்சலி அவரிடம் ஆசீர்வாதம் வாங்குமாறு ஹரிணியை ஜாடை காட்ட கீழே குனிந்தவளை தடுத்தவர் எப்பவும் சந்தோஷமா இருடா..என தோள் சாய்த்துதட்டி அனுப்பினார்.. மாடிக்குச் சென்று அறைவாசலில் அவளை விட்டுவிட்டுஅஞ்சலி கீழேயிறங்க ஹரிணிக்கோ தன்னவனை நினைத்து மனம் படபடக்க ஆரம்பித்திருந்தது..

சும்மாவே போடுற ஆட்டம் தாங்காது இதுல சலங்கையையும் கட்டிட்டா சுத்தம்..கடவுளே என அங்கேயே நின்றிருக்க சட்டென கதவை திறந்து அவளை உள்ளே இழுத்தவன் அவளை கை வளைவிற்குள் வைத்திருக்க,

கையிலிருந்த பால் கொட்டிவிடுமோவென அதை இறுகப் பற்றியவள் என்ன நந்தா இது??யாராவது பாத்துருந்தா??

ம்ம் வந்து அஞ்சு நிமிஷமா வெளிலேயே நின்னுட்டு இருந்தா என்ன பண்றது இத தான் பண்ணணும்..என தன் ஆள்காட்டி விரலால் அவள் கன்னம் வருட தலைசாய்த்து அந்த தீண்டலை ரசித்தவள் வேகமாய் அவனை விட்டு நகர்ந்து முன்னே சென்று டேபிளில் பாலை வைத்து அவனுக்கு முதுகு காட்டியே நிற்க,

இதழோர சிரிப்போடே அவளை நெருங்கியவன் இருபுறமும் அவள் கைப்பற்றி அணைத்தவாறு நிற்க அவளுக்கோ அடிவயிற்றில் ஏதோ போன்ற உணர்வு..

ஹணி.. காதுமடலில் இதழ் உரச ரகசிய அழைப்பை விடுக்க,

ம்ம் என்றவளுக்கு தொண்டை வறண்டதாய் ஓர் உணர்வு..அவனின் செய்கை ஒவ்வொன்றிற்கும் அவள் கன்னத்தின் சூடு ஏறி சிவக்க சட்டென அவளை தன்புறம் திருப்பிபவன் முகத்தை நிமிர்த்தி,

“ஏண்டி இப்படி சிவக்குற??”

செவ்வானமாய் முகம் மாறியதேயன்றி அவளிடம் பதிலில்லை..கண்கள் மூடி இன்னுமாய் தலை தாழ்த்திக் கொண்டாள்..

மை காட் இதுனால தான் நா உன்னை பாத்தாலே கன்ட்ரோல் இல்லாம போய்ட்றேன் டீ..ஐ லவ் யுவர் ப்ளஷிங் சீக்ஸ் என்றவன் தன் கைகளில் ஏந்தி கொண்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.