பாரதியும், சாரங்கனும் இருவரின் வீட்டிலிருந்தும் எடுத்து வரப்பட்ட ஆவணங்கள், காணொளிகள், புகைப்படங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க இருவரும் சேர்ந்தே நிறைய நிழலுலக வேலைகளை செய்து வந்தது தெரிந்தது....
“டேய் சாரங்கா என்னடா இத்தனை மோசமான ஆளுங்களா இருக்காங்க... எவனையுமே நம்ப முடியாது போல இருக்கு... சத்தியமா ரெண்டு பேரையும் தூக்குல தொங்க விடற வரை விடக்கூடாது....”
“இவனுங்க கேஸ் நமக்கு பயங்கற சவால் பாரதி... மேலிடத்து ப்ரெஷர் பயங்கரமா இருக்கும்... மதி சார் நேத்துக்கூட மத்திய மந்திரி போன் பண்ணி நரேஷை வெளிய கொண்டு வர முயற்சி பண்ணினார்ன்னு சொன்னார்... so எத்தனை சாட்சிகள் இருந்தாலும் நரேஷ்க்கும், நாராயணுனுக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க நாம நிறைய கஷ்டப்படணும்....”
“ஹ்ம்ம் நீ சொல்றது கரெக்ட் சாரங்கா.... ஆனா இந்த வழக்குல நாம ஜெய்க்க கடைசிவரை போராடணும்... அதுவும் இந்த நரேஷ் மாதிரி பொறுக்கி எல்லாம் வெளிய திரியவே கூடாது....”, பாரதி சாரங்கனிடம் பேசியபடியே, மறுநாள் நரேஷ் வழக்கிற்கு தேவைப்பட்ட ஆவணங்களை வரிசைப்படுத்தினாள்.
“பாரதி நம்ம சீனியர் எங்க இருந்து திடீர்ன்னு இந்த ரெட்டை கொலை வழக்கை பிடிச்சார்... அதுவும் அப்போ நடந்த வழக்குல வேற யாரோ ஒரு ஆளுக்கு தண்டனை வேற கிடைச்சுதே....”
“ஹ்ம்ம் எனக்கும் அது புரியலை சாரங்கா.... நானே அதைப் பத்தி சீனியர்க்கிட்ட பேசணும்ன்னு நினைச்சேன்.... வர்றியா சீனியர் போய் பார்த்துட்டு வருவோம்.... அப்படியே இந்த நரேஷ் விஷயமும் பேசிட்டு வந்துடலாம்....”
“இப்போ வேணாம் பக்கி.... நாளைக்கு காலைல போகலாம்... இந்தக் கேஸ்க்காக அலைஞ்சு அலைஞ்சு ஒரே போரா இருக்குது... கண்ணை மூடினாவே என்னோட மயிலுக்கு பதிலா இந்த ரெண்டு மங்க்கிகளும்தான் வர்றாங்க.... எவ்ளோ பெரிய கொடுமை பாரு... சேஸிங் சீனை கொஞ்ச நேரம் தள்ளிப்போட்டுட்டு டூயட் சீனைப் போட நான் என்னோட மயிலைப் பார்க்க போறேன்....”
“அடேய் சப்பாணி... இது உனக்கே ஓவரா தெரியலை... லவ் declare பண்ணின நானே அடக்கி வாசிக்கறேன்.... உனக்கு அதுக்குள்ளே டூயட் கேக்குதா... முதல்ல ப்ரொபோஸ் பண்ண பாரு... அப்பறம் பாட்டெல்லாம் பாடலாம்....”
“பொறாமைல பொசுங்காத பக்கி.... நாங்கல்லாம் வாயால சொல்லணும் அப்படின்னே இல்லை... அய்யாவோட கண்ணைப் பார்த்தே எப்படி காதலாகிக் கசிந்துருகறேன்னு என்னோட மயிலு கண்டு பிடிச்சுடுவா... வேணும்ன்னா உன் வாத்தியை அய்யாக்கிட்ட ட்ரைனிங் வர சொல்லு... எப்படி எல்லாம் romance பண்றதுன்னு சொல்லிக்கொடுக்கறேன்.....”
“எல்லாம் நேரம்டா.... எலியெல்லாம் புலி மாதிரி பேசுது.... என்னோட வாத்திக்கு நீ ஒண்ணும் ட்ரைனிங் கொடுக்க வேண்டாம்.... அவர் எல்லாம் பிறவி performer தெரிஞ்சுக்கோ... நானும் போய் ராஜாவைப் பார்த்துட்டு வர்றேன்...”
இருவரும் தங்களுக்கு இணையாக வரப்போகிறவர்களை காணக் கிளம்பினார்கள்.....
தொடரும்
{kunena_discuss:1100}