கணவனுக்கான காபியோடு அவள் மாடிக்குச் செல்ல ரகு குளியலறையில் இருக்க டேபிளின் மீது காபியை வைத்துவிட்டு தயாராக ஆரம்பித்தாள்.. கண்ணுக்கு மையிட்டு தன் தலைமுடியை விரித்து ஈரத்தை உலர வைக்க ரகு மெதுவாய் அவள் பின்னங்கழுத்தில் இதழ்பதித்தான்..
கூச்சத்தில் முதுகை நெளித்தவள் விழி மூடி தன்னவனின் வாசனையை நுகர்ந்து நிற்க,அவளின் நீள முடியை ஓரமாய் ஒதுக்கியவன் அவள் முதுகை தன் விரல் கொண்டு வருட மொத்தமாய் குழைந்து போனாள்..
மெதுவாய் அவளை தன்புறம் திருப்பியவன் இடையோடு இறுக்கி தன்னோடு இணைக்க,இழுத்த அழுத்ததில் துள்ளி அவன் தோள் பற்றியவள் அவனைப் பார்த்து முறைக்க,
“ஸாரி ஹணி பேபி..”
“ம்ம் இப்படியே பண்ணிட்டு இருந்தா என் எலும்பெல்லாம் உடைஞ்சு எடுத்து வெளியே வச்சுற வேண்டியதுதான்..”
“என்ன டீ கல்யாணம் ஆன மறுநாளே இப்படி அலுத்துக்குற??இன்னும்..”
அதற்குள் அவன் வாயை தன் விரல்களால் மூடியவள்,”வர வர நீங்க ரொம்ப மோசமா ஆய்டீங்க நந்தா காபி சாப்ட்டு ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் கீழே வாங்க அம்மா வீட்டுக்கு கிளம்பணும் ஹர்ஷா இப்போ வந்துடுவான்..என்று கூறியவாறே தன் செயினை எடுத்து மாட்டியவள் அவனைப் பார்க்க முகம் சற்றே இறுகியதாய் தோன்றியது அவளுக்கு..
“என்னாச்சு நந்தா??போக வேண்டாமா??”
ஹே லூசு அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல இதோ ரெடி ஆய்ட்டு வரேன் என தயாராகினான்..அவர்கள் கீழே செல்லும் நேரம் ஹர்ஷாவும் வந்துவிட அனைவருமாய் சேர்ந்து காலை உணவை முடிக்க ரகுவும் ஹரிணியும் ஹர்ஷா அஞ்சலியோடு இணைந்து கிளம்பினர்..ஹர்ஷாவும் அஞ்சலியும் முன்னிருக்கையில் அமர ரகு தன்னவளின் தோள் சுற்றி கைப் போட்டவாறு பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான்..
அவளிடம் எந்த வித்யாசமும் இல்லாததாய் இருந்தாலும் அவன் தன் தந்தையை பார்ப்பதை நினைத்து சங்கடப்படுகிறான் என்பது ஹரிணிக்கு புரிந்து தான் இருந்தது…இருந்தும் அவளும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..அவர்கள் வீட்டை அடைந்து மதுரா இவருக்குமாய் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல கிருஷ்ணன் வரவேற்ப்பாய் தலையசைக்க,தலையசைப்போடு அதை ஏற்று நகர்ந்து கொண்டான்..
அதன்பின் மதிய விருந்திற்கான சமையல் வேலைகள் அமர்க்களமாய் நடக்க ரகு ஹர்ஷாவோடு பேச ஆரம்பித்திருந்தான்..சற்றும் கர்வமோ தலைக்கணமோ இல்லாமல் தன் மகனோடு பேசிக் கொண்டிருப்பவனை பார்த்தவருக்கு மனம் கலங்கியது..அவசரப்பட்டு அன்று அப்படி ஒரு காரியத்தை செய்யாமல் இருந்திருந்தால் இருவருக்குமே இந்த தர்மசங்கட நிலை வராமல் தடுத்திருக்கலாம் என எண்ணி வருந்தினார்..
ஹரிணி சமையலறையில் மதுராவோடு உதவி செய்யவதாய் கதை அளந்து கொண்டிருக்க ரகுவிற்கு வந்த அலைப்பேசி அழைப்பில் ஹாலிலிருந்து எழுந்து மாடிக்குச் சென்றான்..பத்து நிமிடங்களுக்கு மேலும் அவன் வராமல் போக மதுரா மகளைச் சென்று சாப்பிட அழைத்து வரச் சொல்ல,ஹரிணி தன்னவனைத் தேடி மாடிக்குச் செல்ல அங்கு அவளுக்காகவே காத்திருந்தவன் அவள் உள் நுழைந்த அடுத்த நொடி இறுக்கமாய் பற்றிக் கொள்ள தன்னை மறந்து கத்தப் போனவள் தானாகவே வாயில் கையை வைத்து மூடிக் கொண்டாள்..
அவனோ தன் வழக்கமான முரட்டுத்தனத்தை இன்னும் அதிகமாய் அவளிடம் காட்டிக் கொண்டிருந்தான்..கைகளும் உதடுகளும் தங்களுக்குள் போட்டி நடத்த அதை அனுபவிப்பவளுக்கோ அழகிய இம்சையாய் இருந்தது..அவளுக்கு பேசும் சந்தர்ப்பம் கூட தருவதாய் இல்லை என்பதை உணர்ந்தவள் ஆன மட்டும் தன் பலத்தைக் கொண்டு அவனை தள்ள தடுமாறி கட்டிலில் விழுந்தவன் அவளையும் தன்னோடு சேர்த்திருந்தான்..
“நந்தா என்னதிது?? சாப்பிட வர சொன்னாங்க..கீழே எல்லாரும் என்ன நினைப்பாங்க??வாங்க போலாம்”என வாய் கூறினாலும் அவனிடமிருந்து நகர்வதற்கான எந்த முயற்சியும் அவளிடத்தில் இருக்கவில்லை..
“மிஸ் யூ டீ ஹணி..”
இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது..உங்க கூடவே தான இருக்கேன் அப்பறம் என்ன??
“ம்ம் இவ்ளோ நேரம் கிச்சன்லல இருந்த..உங்கப்பா வேற என்னையே குறு குறுனு பாத்துட்டு இருந்தாரு..தப்பிச்சா போதும்னு ஓடி வந்துருக்கேன்..”
“ம்ம் உங்களுக்கு எங்கப்பாவ வம்புக்கு இழுக்கலனா தூக்கம் வராதே அவரு ஒண்ணும் உங்களை பாத்து முறைக்கலை..”
“பின்ன ரொமேன்டிக்கா பாத்தாருங்கிறியா” என்றவன் சிரிக்க,
“ஹா ஹா வெரி ஃபன்னி..நாளைக்கு சிரிக்குறேன்..இப்போ நீங்க சாப்பிட வரீங்களா இல்லையா???”
“என் மேல இருக்குற 50 கேஜி தாஜ்மஹால் கொஞ்சம் இறங்கினா நா எழுந்துதுப்பேன்..”,என சீரியஸாய் கூற,
அப்போதுதான் அவன் கை தன் மேல் இல்லாததை கவனித்தவள் வேகமாய் எழுந்து நின்று அவனை முறைத்தாள்..