நீ என்கிட்ட உனக்கு தோணுறத தோணுற விதமாவே வெளிப்படுத்தலாம்..அதேதான் எனக்கும் நிச்சயமா அப்பப்போ உன்னை சீண்டிட்டுதான் இருப்பேன் ஆனா ஐ நோ மை லிமிட்ஸ்..சோ மொதல்ல நீ என்கூட சகஜமா இரு..மேபி நாம சென்னை போனப்பறம் உனக்கு அது இன்னமும் கொஞ்சம் ஈஸியா இருக்கலாம்..
இங்க இவ்ளோ பேரு இருக்குறதால அவங்க பேசுற விதம் லைக் ஹஸ்பண்ட்னா இப்டி அப்படினு அதனாலேயே நீயும் தயங்குறியோனு தோணுது..உனக்காக உன்னை விட அதிகமாவே நா யோசிச்சு வச்சுருக்கேன்..இதெல்லாம் எதிர்பாத்த விஷயமும்கூட ..உன்னை நல்லா பாத்துப்பேன்ங்கிறத விட உனக்கு கம்பர்டபிளா இருக்குறமாதிரி பாத்துப்பேன்னு சொல்லலாம்..என்ன குழப்பம் போச்சா??என குறும்பாய் அவளை பார்க்க,
“ஏன்ப்பா என்ன இவ்ளோ லவ் பண்றீங்க???”
“நிரு..”
“இல்ல செல்வா நிச்யமா இதெல்லாம் சாதாரண விஷயமோ சாதாரண காதலோ கிடையாது..அம்மா அப்பாவுக்கு அப்பறம் சொல்லபோனா அவங்களை விடவும் பல மடங்கு என் கண்ணை வச்சே நா நினைக்குறத புரிஞ்சுகிட்டு..எனக்காக உங்க ஆச பாசங்களையெல்லாம் ஒதுக்கிவச்சு..ஏன் செல்வா???”
“ஏ ரசகுல்லா ரொம்ப யோசிக்காத..இருந்தாலும் இனி இந்த கேள்வியை நீ கேக்க கூடாதுங்கிறதுக்காக சொல்றேன்..எனக்கு அம்மானா ரொம்ப இஷ்டம்..அப்பாவும் பிடிக்கும்தான் இருந்தாலும் அம்மாவோட க்ளவர்நெஸ் ரொம்ப பிடிச்ச ஒண்ணு..அம்மா ரொம்பலா படிக்கல ஆனா அவங்க வில்பவர்க்கு இணையே கிடையாது..நாங்க இப்போ இந்த நிலைமைல இருக்கோம்னா அதுக்கு முழுகாரணமும் அம்மா மட்டும்தான்..
அது அப்பாவுக்கும் தெரியும்..அடுத்ததா நா சந்திச்சு ப்ரமிச்சது ஷாலினியை பாத்து..ஆனா முதல் ரெண்டு தடவையும் உன்னை பாத்தப்போ கொஞ்சம் கோபம்தான் வந்தது..யாருனே தெரியாதவங்கள பாத்தா இப்படி பயப்படுறியேனு..அடுத்து உன் அம்மா அப்பா பத்தி சொன்னப்போ கொஞ்சமே கொஞ்சமா பாவம்னு தோணிச்சு..
ஆனா நாளடைவுல அந்த பயமே அழகா தெரிஞ்சுது அதுவும் என்கிட்ட இந்த முட்டைகண்ணை உருட்டி பேசும்போது ரொம்பவே பிடிச்சுது..கல்யாணம் பண்ணா இன்டிபெண்ட்டா யோசிக்குற தைரியமான அப்படி ஒரு இமேஜ் தான் மைண்ட் ல இருந்தது..உன்கூட பழகுறவர..அண்ட் உன்னைபத்தி முழுசா என்கிட்ட சொன்ன அன்னைக்குதான் உண்மையாவே எல்லாரையும் விட உனக்கு தைரியம் அதிகம்னு தோணிச்சு..
அத்தனை வருத்தங்களையும் உள்ள போட்டு புதைச்சு வாழறதவிட கஷ்டம் எதாவது இருக்குமா என்ன..அந்த செகண்ட்லயிருந்து உனக்காக உன்னை பத்தி மட்டும்தான் நிறைய யோசிச்சேன்..அப்படியே நீ ஆணி அடிச்சமாதிரி என் மனசுல வந்து உக்காந்துட்ட பட் இத்தனை நாளா அதை எக்ஸ்ப்ரஸ் பண்ணாம இருந்துருப்பேன்..இப்போதான் அதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சுருக்கு சோ ஒவ்வொரு செகண்டும் உன்கிட்ட எதாவது சொல்லி போரடிச்சுட்டேயிருக்கேன்..போதுமா விளக்கம் என அவள் மூக்கை விரலால் தட்ட
எழுந்தமர்ந்தவள் தன்னவன் முகத்தை கையில் ஏந்திக் கொண்டாள்..
“தேங்க் யூ அண்ட் லவ் யூ சோ மச்ங்க..”,என தன்னவன் கன்னம் வருட,குறும்பாய் அவள் விரல் அகற்றி கன்னம் காட்டினான்..அடுத்த நொடி சற்றும் தாமதிக்காமல் அழுத்தமாய் இதழ் பதித்திருந்தாள்..ஓரடி இடைவெளியில் அமர்ந்திருந்தவளை இடைபிடித்து இன்னுமாய் தன்னருகில் அமர்த்திக் கொண்டவன் தன் மார்பிl அவள் பின்னந்தலை சாய்த்தவாறு கை கோர்த்து விரல் உரச நிறைய நிறைய பேசினார்கள்..ஸ்வீட் நத்திங்ஸ்தான் ஆனாலும் அனைத்திற்குமே அவர்களிருவருக்கும் ஆயிரம் அர்த்தமிருந்தது..
மறுநாள் வழக்கம்போல் தன்னவனின் இரும்புபிடியை விலக்கி எழுந்தவள் சில நிமிடம் அவனையே பார்த்திருந்திருந்தாள்..டிப்பார்மெண்டில் முரடனாய் வீட்டிற்கும் உறவுகளுக்கும் கோபகாரனாய் இருப்பவன் தன்னிடம் நண்பனாய் காதலனாய் காட்டும் அன்பு அவளை மலையுரத்தில் மகிழ்ச்சியடைய செய்திருந்தது..
குளித்து தயாராகி கீழே சென்றவள் அவனுக்கான காபியோடு வர அப்போதும் அவன் உறங்கி கொண்டிருந்தான்..மென்மையாய் அவன் நெற்றியில் இதழ் பதித்தவள்,
“ குட்மார்னிங்ப்பா..காபி கொண்டு வந்துருக்கேன் “,என கூற அரைகுறை தூக்த்தில் எழுந்து அர்ந்தவன்..
“குட்மார்னிங் ரசகுல்லா..ஹே என்ன இன்னைக்கு புடவை கட்டிக்கல குடு நா ஹெல்ப் பண்றேன்..”
“ஒண்ணும் வேண்டாம் நா ஆல்ரெடி கீழே போய்ட்டு வந்துட்டேன் அம்மா ஒண்ணும் சொல்லல”, என மெதுவாய் கூற..
“ம்ம் எங்கம்மா வர வர ரொம்ப பேடா ஆய்ட்டாங்க”, என போலியாய் சலித்தவன் அவளை பார்த்துச் சிரித்தான்..நீ சாப்டியா??
ம்ம் ஆச்சு..என அவனருகிலேயே நின்றவள் அவன் குடித்து முடித்ததும் டம்ளரை கையில் வாங்கிக் கொண்டாள்..வேகமாய் அவனுக்காக அலமாரியிலிருந்து டவலை எடுத்துக் கொடுத்தாள்..அவன் வருவதற்குள் அவனுக்காக சட்டை வேஷ்டியையும் எடுத்து வைத்து வேறென்ன வேண்டுமென பார்த்துக் கொண்டிருக்க அவன் வரும் சத்தம் கேட்டு திரும்பியவள் இடுப்பில் கட்டிய துண்டோடு வந்து நின்றவனை பார்த்து பதறித்தான் போனாள்..