“அய்யோ நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவுமில்ல வருணா.. நீ இப்படியெல்லாம் பேசறது எனக்கு கஷ்டமா இருக்கு..” என்று அவன் சமாதானம் பேச ஆரம்பித்தாலும், அவள் சீக்கிரத்தில் இறங்கி வரவே இல்லை. உனக்கு சளைத்தவள் இல்லை நான் என்பது போல் அவள் நடந்துக் கொள்ள, அவளை இப்படி வருத்தப்பட வைத்துவிட்டோமே என்றிருந்தது அவனுக்கு..
இப்போதே தன் பிரச்சனையை சொல்லிவிடலாமா? என்று அவன் நினைத்தான். ஆனால் இந்த சமயம் இதை வேறு சொல்லி, அவள் ஒரேடியாக தன்னை விட்டு சென்றுவிட்டாள் என்ன செய்வது என்று பயந்தவன், அதை சொல்லவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டான். அவளுக்கும் இந்த திருமணம் பிடித்திருக்கிறது. தன்னுடன் நல்லப்படியாக வாழத்தானே ஆசைப்படுகிறாள். பிறகும் இப்படி ஒதுங்கி சென்று வ
...
This story is now available on Chillzee KiMo.
...
மல்லாக்கப் படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். அவன் உயரத்திற்கு அவனது கால்கள் தரையில் இடித்தது.
“ம்ம் இப்படி படுத்துக் கொண்டா தூங்குவாங்க” என்று அவள் இப்போது நினைத்து சிரித்தவள், அவனின் கன்னங்கள் இரண்டையும் கிள்ளிவிட்டு எழுந்தாள். டிவிடி ப்ளேயரை சென்று குடைந்துக் கொண்டிருந்தாள்.