ஆம் அவனின் ஆசையே அவள் அவனுக்கு நடனமாடி காட்ட வேண்டும் என்பது தான், எப்போது முதன்முதலில் சில நிமிடங்கள் அவளது ஆட்டத்தை பார்த்தானோ, அப்போதே அவள் நடனத்தை முழுமையாக பார்க்க வேண்டுமே என்று நினைத்தான். ஆனால் அந்த காலக்கட்டத்தில் அவனால் அதை எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் திருமணமான பின்பும் இப்படி சிலமுறை அவள் தனியாக இருக்கும் போது வீட்டில் ஆடுவதை பார்த்திருக்கிறான். அந்த நேரத்தில் அவன் எதைச்சேயாக வீட்டுக்கு வரும்போது அவள் ஆடுவதை நிறுத்திவிடுவாள்.
முன்பு அவர்களுக்குள் இந்த அன்னியோன்யம் இல்லாததால் அவனால் கேட்கமுடியாது. ஆனால் அதன்பின்னும் அவன் வந்தால், அவள் ஆடுவதை நிறுத்தும் போது, “எனக்கு உன்னோட டான்ஸ் பார்க்கனும் போல இருக்கு ஆடேன்” என்பான். ஆனால் அவள் வெட்கத
...
This story is now available on Chillzee KiMo.
...
், “தன் பள்ளித் தோழியின் அண்ணன்” என்று அவனை அறிமுகப்படுத்தியவள், பின் ஆதவனைக் காட்டி, “என் கணவன்” என்று அறிமுகப்படுத்தினாள்.
அதைக்கேட்டதும், “இவனா உன் கணவன்?” என்று கேட்பது போல் ராகேஷின் பார்வை இருந்தது. அதை ஆதவனும் வருணாவும் உணர்ந்திருந்தாலும், அதை கண்டும் காணாமல் அமைதியாக இருந்தனர்.