அதிலிருந்தே அவருக்கு புரிந்தது தனது தேவதை இன்று கோபத்தில் இருக்கிறாள் என்று..,
இல்லையென்றால் கௌதமும்,அவளும் சேர்ந்து வீட்டை இரண்டு படுத்திவிடுவார்கள் என்று
அவருக்கே தெரியும்...
உள்ளே சென்ற கதிரேசனுக்கு இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது,அது அன்னமும் தேன்நிலாவும் வெவ்வேறு மூலையில் அமர்ந்திருந்தது தான்,அதோடு அவர்கள் இருவரும் அழுதுக் கொண்டிருந்தது அவர்கள் இருவருக்கும் தான் இன்று பஞ்சாயத்து என்று அவருக்கு சொல்லாமலே புரிந்தது..(இந்த அம்மா,பொண்ணுங்க பிரச்சனை இருக்கே..அய்யையோ அதுக்கே அப்பாங்களுக்கு நிறைய தைய்ரியம் வேணும்....)
கதிரேசனை பொருத்தவரை தேன்நிலா வளரும் குழந்தை,அன்னம் வளர்ந்த குழந்தை..
முதலில் தனது மகளிடம் சென்றவர் ,”என்னடா ,அம்முக்குட்டி என்ன நடந்துச்சு...”என்று கேட்க
“அப்பா.அம்மா திட்டிடாங்க..,பாப்பாவ..”என்று அவள் தேம்பிக் கொண்டே கூறவும் என்ன என்பது போல் அன்னத்தை பார்த்தார் கதிரேசன்.
அதற்கு அன்னம் கூறிய செய்தியை கேட்ட கதிரேசனுக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை..(அப்படி என்ன சொன்ன இந்த அன்னம்..,யோசிச்சிட்டே இருங்க..,எல்லாம் நாம சின்னவயசுல பண்ண அட்டுழியம் தான்..,அடுத்த எபில சொல்லுறேன்..இப்ப மீ எஸ்கேப்...)
“போட்டாள் காட்டில் புளுதேல்லாம்,ஓட்டம போட்டு திரிஞ்சோம்
வெயில் தவிர வாழ்க்கையில் வேற என்ன கண்டோம்..”
காதலி காதலிக்கபடுவாளா...
தொடரும்!
Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page
{kunena_discuss:1175}