வருணாவை பற்றிய தவறான பேச்சுக்கள் இதுவரை வருணாவிற்கோ, ஆதவனுக்கோ தெரிய வரவில்லை. இருவரும் அவரவர் வேலையில் மூழ்கியதால் அவர்கள் காதுக்கு அது எட்டவில்லை. காலையில் கிளம்பி போகிறவர்கள், இரவு தான் வீடு திரும்புகிறார்கள். இதில் அவர்களிடம் நேரடியாக இது போல பேச்சுக்களை யாரும் பேசாததால் அவர்கள் இருவருக்கும் அது தெரிய வாய்ப்பேயில்லை.
ஆனால் கோமளாவின் காதுக்கு இதுபோன்ற பேச்சுக்கள் எட்டியது. வருணா ராகேஷை ஒருமுறை வீட்டுக்கே கூட்டிக் கொண்டு வந்ததை அவளே பார்த்திருக்கிறாள். அவளுக்கு வருணாவையும் செண்பகத்தையும் நன்றாக தெரியும் என்பதால் வருணாவைப் பற்றி தவறாக நினைக்கவில்லை. அதற்காக யாரோ என்னவோ பேசிக் கொள்கிறார்கள் என்று அமைதியாகவும் விட முடியவில்லை. கோமளாவிற்கு திருமணமாகி இங்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் முடிஞ்சிடுச்சே? ரெண்டு நாளுக்கு தீப்திக்கிட்ட அட்ஜஸ்ட் செஞ்சுக்க சொல்லி சொல்லிடமா?” என்று கூட நினைத்திருந்தாள். அதையே ஆதவனும் சொல்லவும், “இவன் என்ன நான் நினைத்ததையே சொல்கிறான்? என்று வியப்பாகவும், ஆதவன் இப்படி சொல்பவன் இல்லையே! பின் ஏன் அப்படி சொல்கிறான்? என்று அதிர்ச்சியாகவும் பார்த்தாள்.