(Reading time: 10 - 20 minutes)

இதுதான் சாக்குன்னு என்னை வேதாளன்னு சொல்றீங்க இல்லை உங்களை ? மாயா அவனின் காது மடல்களைத் திருகினாள். கமல் இப்போ எனக்கு மனசுக்கு நிறைவாத்தான் இருக்கு, இனி நமக்கு எந்த சிக்கலும் இல்லை ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தாலும் நான் இதுவரைக்கும் நேரில் பார்க்காத சுப்ரியாவின் நிலைமையை நினைச்சா மனசுக்கு வேதனையா இருக்கு, ஒரு பெண்ணா அவளைப்போல இன்னும் எத்தனை பேர் தன்னோட வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிக்கிறாங்களோ, சுப்ரியா பேர்ல ஒரு அறக்கட்டளை தொடங்கி நம்மால முடிந்த உதவியை எல்லாருக்கும் செய்யணும்

கட்டாயம் செய்யலாம் 

வினிதாவிற்கு இத்தனை கொடூர புத்தி இருக்குமின்னு நான் நினைக்கலை, அவ செய்த தப்புக்கு அவளோட குடும்பம் என்ன செய்யும் பாவம் அவங்க முக்கால்வாசி இவளோட சம்பளத்தை எண்ணி தான் வாழ்ந்துட்டு இருந்தாங்க இப்போ அதுயில்லைன்னா அவங்களுக்கும்

இன்னா செய்தாரே ஒருத்தர் அவர் நாண 

நன்னயம் செய்துவிடல் என்று சொல்றே உனக்காக நான் எதையும் செய்வேன் மாயா..

அதுதான் எனக்குத் தெரியுமே ! அதேபோல இத்தனை நாள் காத்திருந்தது போதும் சீக்கிரம் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்

உத்தரவு மகாராணி கமலைப் போலவே அங்கே அசோக்கும் லட்சணாவிற்கு அடிபணிந்து இருந்தான். மேகங்கள் விலகி சூரியனை விழித்தெழ வைப்பதைப் போல அங்கே கவலைகள் பறந்து சந்தோஷமின்னல் தெரிக்க ஆரம்பித்தன. 

வாழ்க மாயா கமலின் வானத்தில் என்று மறைந்துவிடாத மாயா....

முற்றும்

Episode # 22

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.