“நகரு. இன்னிக்கு நான் தோசை ஊத்தித் தர்றேன். பெரிசா பீத்திக்கிட்டு வந்துட்டான். அத்தை நீங்க இருங்க. நான் செய்யறேன்.”
அவள் தோசை ஊற்றிக்கொடுக்க அங்கிருந்த மேடையில் இருந்த காலியான இடத்தில் ஏறி அமர்ந்துகொண்டே தட்டில் அவள் கொடுத்த தோசையை உண்டான்.
வனிதாமணியும் அங்கேயே அமர்ந்துவிட்டார். கலகலவென எதை எதையோ சின்னவர்கள் பேசிக்கொண்டேயிருக்க வனிதாமணி அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டே சாப்பிட்டார்.
சாப்பிட்டு முடித்த பிறகு சமையல் அறையை ஒதுங்க வைக்க அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள். அப்போது விதவிதமான கருவிகள் இருந்தன.
“அத்தை. இதை எல்லாம் வாங்கி வச்சிருக்கீங்க?”
“நான் எங்கேம்மா வாங்கினேன்? எல்லாம் இவன் வேலைதான். எங்கே எதைப் பார்த்தாலும் என் ஞாபகம் வந்து வாங்கிட்டு வந்துடுவான். வாங்கிட்டு வர்றது மட்
...
This story is now available on Chillzee KiMo.
...
னைப் பார்த்துப் பார்த்து அவனுக்குப் பிடிப்பதை அவரே தெரிந்துகொண்டார்.
மறு குழந்தை வேண்டும் என்று அவர் அடம் பிடித்ததற்கு ரவிச்சந்திரன் அத்தனை எளிதில் சம்மதிக்கவில்லை.
ஆனால் கடைசியில் அவரது பிடிவாதம் வென்றது. யுகேந்திரன் பிறந்தான். ஆனால் சோதனையாக அவருக்கு தாய்ப்பாலே சுரக்கவில்லை.