இரண்டாவது குழந்தை இறந்தபோது அவருக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்தது. அப்போது அதை நிறுத்துவதற்காக அவர்கள் மேற்கொண்ட சிகிச்சையினால் அவருக்கு இப்போது தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினை இருந்தது. அவரும் என்னென்னவோ செய்துபார்த்தார்.
குழந்தை தாய்ப்பாலுக்கா அழும்போது அவரது இதயம் துடிக்கும். என்ன செய்வது?
புட்டிப்பால் குடித்து வளர்ந்ததால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு குறைவாக இருந்தது. அதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அதனால் அவரது முழுக்கவனமும் இரண்டாவது குழந்தை மீதே இருந்தது. இந்தக் கால கட்டத்தில் மகேந்திரன் அவரைத்தேடும் சிறிது நேரத்தைக்கூட விட்டுவிட்டான். சமர்த்தாய் தானே குளித்துக் கிளம்பி பள்ளிசீருடையை அணிந்துகொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் என்ன சாப்பாடு இருக்கிறதோ அதைச் சாப்பிட்டுவிட்டுத் தன் தந
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11081-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-04">Episode # 04
{kunena_discuss:1182}