“சும்மா அத்தையைப் பார்க்க வந்தேன்.”
தான் என்னவோ தவறு செய்துவிட்டது போல் தலைகுனிந்தவாறே பேசிய சாருமதியைக் கண்டதும் யுகேந்திரனுக்குக் கோபம் வந்தது.
“ஏன் சாருக்கா நீ வரும்போது மதிக்கா மட்டும் வருவது தப்பா?”
அந்த வார்த்தைகள் நாராசமாய் அவள் காதில் ஒலித்தது.
அவள் மனதிற்குள் நீயே வரும்போது அவள் வந்தால் என்ன என்ற அர்த்தத்தில்தான் அவன் கேட்டான் என்று அவளுக்குப் புரிந்தது.
அவள் எத்தனை கூறியும் அவன் அவளை அக்கா என்றே அழைக்கிறான். அதுவும் அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் அப்படி அழைக்கிறான்.
“சரி. நான் கிளம்பறேன்.”
சாருமதி கிளம்பினாள்.
“இரு மதிக்கா. சாருக்கா இப்பதானே வந்திருக்கா. எப்படியும் அவகிட்ட வண்டி இல்லை. உன்னோடவே வந்திருவா. கொஞ்ச நேரம் இரு. அம்மா அவளுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்.
“ஆமா. அவங்க உன் அத்தைப் பெண்தானே? நீ ஏன் அவங்களை அக்கான்னு சொல்றே?”
“அக்கான்னு சொல்றதே அவளை வெறுப்பேத்ததான்.”
“அவங்க உன் அண்ணனிடம் பழகுற விதத்தைப் பார்த்தால் அவங்களோட விருப்பம் வேற போல் தெரியுதே?”
“அப்படி அவ ஆசைப்பட்டா போதுமா? என் அண்ணன் விருப்பப்படனுமே?”