“ஏன் உன் அண்ணனுக்கு அதில் விருப்பமில்லையா?”
“அது தெரியாமல்தானே குழம்பிக் கிடக்கிறேன். அவனுக்குப் பிடிச்சதுன்னா வேறு வழியில்லாம ஏத்துக்க வேண்டியதுதான். ஆனால் அவளைக் கல்யாணம் பண்ணினா அவனோட வாழ்க்கை சந்தோசமா இருக்குமான்னு சந்தேகம்தான்.”
“அவங்க உண்மையிலேயே உன் அண்ணனை விரும்பினா என்ன பண்றது?”
“அப்படி இருந்தா உண்மையிலேயே சந்தோசம்தான். ஆனால் அதற்கான வாய்ப்பு ரொம்பக் குறைவு.”
“மதிக்கா உன் அண்ணியா வந்தா உனக்குப் பிடிக்குமா?”
அவள் கேட்டதும் அவன் சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.
“என்ன பதில் சொல்லாமல் இருக்கிறே?”
“மதிக்கா ஆசைப்பட்டாலும் அந்த சாரு அதை நடக்க விடமாட்டா. போராடி ஆசைப்பட்டதை பெறும் குணமும் மதிக்காவுக்கு கிடையாது. அவ தன் பெத்தவங்களை மீறி எதுவுமே செய்யமாட்டா. அவ பெ
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறது.
அதனால் அன்றைய இரவு தாமதப்படுத்தாமல் இருவரும் சீக்கிரமே உறங்கச்சென்றுவிட்டனர்.
“அத்தை. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.”
வனிதாமணியின் கால்களில் விழுந்தாள் கிருஷ்ணவேணி.
எளிய கைத்தறி சுடிதார் அணிந்திருந்தாள்.