“அதனால் என்னம்மா? இத்தனை நாட்கள் என் சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து போயிருந்தது. இப்பதான் உன் மூலமா எனக்கு விடிவுகாலம் பொறந்திருக்கு. அதுக்குதான் எனக்கு பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் இரண்டு கட்டைத்தடியன்கள் தான் பொறந்திருக்காங்க.”
என்று செல்லமாய் சலித்துக்கொண்டார்.
“அம்மா. இதெல்லாம் ரொம்ப அதிகம். உனக்கு உன்னோட சமையல் அலுத்துப்போச்சுன்னு சொல்லியிருந்தா நாங்க சமையல் வேலைக்கு ஆள் வைத்திருப்போம். அதை விட்டுட்டு எங்களை குறை சொல்லக்கூடாது. நீ என்னண்ணா சொல்றே?”
என்று தன் அண்ணனையும் கூட்டு சேர்த்தான். அவனிடம் கேட்காமலே இருந்திருக்கலாம் என்பதுபோல் அவனது வழக்கமான மௌனத்தைக் கண்டு தன்னையே நொந்துகொண்டான்.
எப்படி அவனால் பேசாமல் அமைதியாக இருக்க முடிகிறது. தன்னால் அப்படி இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11160-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-06">Episode # 06
{kunena_discuss:1182}