ஒன்பதாம் வகுப்பின் இடையிலேயே வேல்விழி பூபெயய்தி விட அதற்கு விழாவும் வைத்திருந்தனர்...
என்னதான் ஒருவர் மீது மற்றொருவருக்கு கோபம்,மனஸ்தாபம் இருந்தாலும் ஒரு விஷேஷம் என்று வரும்போது அவர்களை விட்டுக்கொடுக்காமல் அழைப்பது உறவின் இயல்பு....
அதுபோல் தான் கதிரேசனின் குடும்பத்தையும் அழைத்திருந்தனர் தனலட்சுமி குடும்பத்தினர்...
அந்த விஷேஷதிற்கு அனைவரும் சென்றிருந்தனர்...
அந்த விழாவிற்கு சென்றபோதுதான் அவர்களது சொந்தங்களை நன்கு தெரிந்துக் கொண்டனர் கௌதமும்,தேன்நிலாவும்...
இந்த விழாவிற்கு வந்தப்பிறகு தேன்நிலாவின் மனதினுள் ஆசை இல்லை...இல்லை...ஒரு ஏக்கம் வந்துவிட்டது....
அவளது மாமா சந்தனாபண்டியன் வேல்விழியிடம் காட்டும் அதே அன்பை தன் மீது காட்டுவாறா... தனக்கும் இது போல் அனைத்து சடங்குகளை தனது அத்தை மல்லி தனக்கு செய்வாரா... இல்லை தனது மச்சான் மதிவேந்தன் தான் வேல்விழியிடம் பேசுவது போல் தன்னிடம் பேசுவானா என்ற ஏக்கம் தான் அவைகள்...
ஆனால் அந்த விழாவில் மகிழ்வாக இருந்தது அன்னம் மட்டும் தான்... அனைத்து சொந்தங்களின் முன்பும் தேன்நிலா தன்னை அம்மா...அம்மா.. என்று அழைக்கும் போது பூரிப்படைந்து போனாள்... அன்னம்...
வேல்விழி விசேஷத்திற்கு சென்று வந்த பின்பு அன்னத்திற்கு தனது மகளுக்கும் இதேபோல் நன்கு விழா செய்ய வேண்டும் என்று நினைத்தாள்...
அவ்வாறு நடக்குமா....
காதலி காதலிக்க படுவாளா...
Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page
{kunena_discuss:1175}