எத்தனை கேள்வி கேட்டாலும் ஒரு வார்த்தை பதில் மட்டுமே அவனிடம் இருந்து வரும்....
அதுவும் கூட பொதுவான கேள்விகளுக்கு தான்... சாப்பிட்டாயா, என்றெல்லாம் கேட்டால், பதிலே வராது....
அவனுக்கு உளவியல் சம்மந்தமான பிரச்சனை இருக்கிறது என்று கூட அவளுக்கு சந்தேகம் உண்டு...
ஆனால் அதை பற்றி அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை...
அவளுக்கும் சுமித்ராவிற்கும் இடையே இருந்த நட்பை வைத்து அவள் கமலிடம் ஒரு எல்லைக்குள்ளேயே தானே பேச முடியும்...
மற்றபடியும் அவன் வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பது ரோஷனி வழியாக அவளுக்கு தெரிய வந்திருந்தது...
நிரந்தரமான ஒரு வேலை கிடைப்பதே கஷ்டம் என்றிருக்கும் இந்த நாளில் தன் நிதி சார்ந்த அறிவைக் கொண்டு பல இடங்களில் ஆலோசகராக அவன் பணி புரிவது அவனின் அறிவுக்கும், திறமைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“கூட்டத்துல இருந்தார்... பார்த்தேன்.... ஃபங்க்ஷன் முடிஞ்சு வெளியே வந்து தேடினா ஆளையே காணும்... ரேஷ்மி, வீட்டுக்கு போன உடனே நீ அப்பா காலிலேயும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு...” என்றாள்...
ரேஷ்மி ஆம் என்றும் இல்லாமல், இல்லை என்றும் இல்லாமல் பொதுவாக, பேருக்கு தலை அசைத்து வைத்தாள்...