மற்றபடியும் அவளுக்கு விமலும், பூங்கோதையும் பரிந்துக் கொண்டு வந்தார்கள்...
“ம்ம்ம்... அவ போய் காலிலே விழுந்தா மட்டும் அவன் அப்படியே சந்தோஷப் படுற மாதிரி தான்... அவன் என்ன மாதிரியான மனுஷன்னே புரியலை....”
“ரேஷ்மி முகம் எப்படி சந்தோஷத்துல ஜொலிக்குது இன்னைக்கு எதுக்கு அண்ணனை பத்தி பேசி அவ மூடை ஸ்பாயில் செய்ற?”
ரோஷனி மாமியாரை விட்டு விட்டு கணவனை கோபமாக பார்த்தாள்...
அதை கவனித்த பூங்கோதை, பேச்சை மாற்றும் எண்ணத்துடன்,
“கிளம்புவோமா ஹேமா? உனக்கு பிடிச்ச எல்லாத்தையும் ரெடியா செஞ்சு வச்சுட்டு தான் கிளம்பினேன்...” என்று ஹேமாவிடம் கேட்டாள்.
“என்னம்மா நீங்க? இப்படி எல்லாம் கஷ்டப் படாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லிட்டேன்...”
“க்கும்.... இதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொல்றது பாட்டி.
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரியான மனிதர் இவர்...!!!
“என்ன ரேஷ்மி அமைதியா இருக்க??”
ஹேமாவின் கேள்வி அவளை இந்த உலகத்திற்கு அழைத்து வந்தது....
என்ன சொல்வது என்று புரியாமல் அவள் விழிக்க,
“எந்த ஸ்பெஷலைசேஷன் எடுக்க போறேன்னு கேட்குறாங்க...?” என்று ஹேமாவின் கேள்வியை மீண்டும் சொன்னாள் ரோஷனி...